SaraNextGen.Com

Chapter 6.3 - Valarum vanikam - Chapter 6 Term 2 6th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Detailed Solutions Of Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 1.
உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
எங்கள் ஊர் – நீலகிரி :
(i) தேயிலை, காபி, குறுமிளகு போன்ற பணப்பயிர்.
(ii) பாகற்காய், பீன்ஸ், பூசணி, மஞ்சள், இஞ்சி போன்ற காய்கறிகள்.
(iii) கேரட், கோஸ், நூக்கல், குடைமிளகாய் போன்றவை.

Question 2.
ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.
Answer:
சிறப்புப் பொருள்கள் :
(i) மதுரை மல்லி
(ii) திருப்பதி லட்டு
(iii) திருநெல்வேலி அல்வா
(iv) திண்டுக்கல் பூட்டு
(v) மணப்பாறை முறுக்கு
(vi) சேலம் மாம்பழம்
(vii) காஞ்சிபுரம் பட்டு
(viii) பழனி பஞ்சாமிர்தம்
(ix) பொல்லாச்சி இளநீர்
(x) ஊட்டி ரோஜா
(xi) காஞ்சிபுரம் இட்லி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி
Answer:
அ) நுகர்வோர்

Question 2.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து
Answer:
இ) வணிகச்சாத்து

Question 3.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
Answer:
அ) பண்டமாற்ற

Question 4.
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வண்ண ம் + படங்கள்
ஆ) வண்ண ப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ண மான + படங்கள்
Answer:
அ) வண்ண ம்+ படங்கள்

Question 5.
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த
Answer:
இ) விரிவு + அடைந்த

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) வணிகம் – ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் விற்பதும் வணிகம்.
ஆ) ஏற்றுமதி – பழங்காலத்தில் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இ) சில்லறை தற்போது சில்லறை தட்டுப்பாடு அதிகமாகி விட்டது.
ஈ) கப்பல் – கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்.

குறுவினா

Question 1.
வணிகம் என்றால் என்ன?
Answer:
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

Question 2.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் எனப்படும்.

Question 3.
சிறுவணிகப் பொருட்கள் யாவை?
Answer:
பால், கீரை, காய்கறிகள் போன்றவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

சிறுவினா

Question 1.
சிறுவணிகம், பெருவணிகம் – வேறுபடுத்துக.
Answer:

Question 2.
பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
Answer:
பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள் :
தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு.

பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள் :
சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபியாவிலிருந்து குதிரைகள்.

சிந்தனை வினா

Question 1.
வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?
Answer:
(i) வணிகப் பொருள்கள் உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரியிடம் செல்கிறது.
(ii) மொத்த வியாபாரியிடமிருந்து சில்லரை வியாபாரியிடம் செல்கிறது.
(iii) சில்லரை வியாபாரியிடமிருந்து நுகர்வோரை(மக்களை) வந்தடைகின்றது.
(iv) இணையத்தின் மூலமாகவும் பொருள்களை மக்கள் பெறுகின்றனர்.
(v) அஞ்சல் வழியிலும் பொருள்களைப் பெறுகின்றனர்.

Question 2.
உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) பால் வியாபாரம்
(ii) காய்கறி அங்காடி
(iii) செய்தித்தாள் விற்பனையாளர்
(iv) தேநீர் அங்காடி
(v) பல்பொருள் விற்பனையாளர்

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)

கூடுதல் வினாக்கள்

Question 1.
வணிகம் குறித்து கூறும் இலக்கியங்கள் யாவை?
Answer:
(i) தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
……………….
உமணர் போகலும். – நற்றிணை – 183
(ii) பாலோடு வந்து கூழொடு பெயரும்………….. – குறுந்தொகை – 23
(iii) பொன்னோடு வந்து கறியொடு பெயரும்………… – அகநானூறு – 149

Question 2.
வணிகத்தின் வகைகளையும் அவ்வகையில் நடைபெறும் வணிகம் பற்றியும் எழுதுக.
Answer:
(i) வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் E வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை – ‘வணிகச்சாத்து’ என்பர்.

(ii) கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம்’ என்றும் ‘பாக்கம்’ என்றும் குறிக்கப்பட்டன.

(iii) தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

(iv) வணிகத்தைத் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்.

Question 3.
இணையவழி வணிகம் பற்றி எழுதுக.
Answer:
(i) கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.

(ii) இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம், விலை, சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவன பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை நம் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

(iii) பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம். வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது.

(iv) பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Also Read : Chapter-6.4---Ulaippe-mulatanam-Chapter-6-Term-2-6th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen