SaraNextGen.Com

Chapter 3.1 - Noyum maruntum - Chapter 3 Term 1 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
ஐம்பெருங்காப்பியங்கள் :
(i) சிலப்பதிகாரம்
(ii) மணிமேகலை
(iii) வளையாபதி
(iv) குண்ட லகேசி
(v) சீவகசிந்தாமணி

ஐஞ்சிறுகாப்பியங்கள் :
(i) உதயண குமார காவியம்
(ii) நாக குமார காவியம்
(iii) யாசோதர காவியம்
(iv) சூளாமணி
(v) நீலகேசி.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உடல்நலம் என்பது …………….. இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
Answer:
இ) பிணி

Question 2.
நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……….
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நன்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
Answer:
இ) இவை + உண்டார்

Question 4.
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) தாம் இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
Answer:
இ) தாமினி

குறுவினா

Question 1.
நோயின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்.
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

Question 2.
நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
Answer:
பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகள் :
(i) நல்லறிவு
(ii) நற்காட்சி
(iii) நல்லொழுக்கம்.

சிறுவினா

Question 1.
நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

நோயைத் தீர்க்கும் வழிகள் : அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. அவை நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையாகும். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

சிந்தனை வினா

Question 1.
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
Answer:
(i) கருணையுடன் வாழ்தல்.
(ii) இரக்கத்துடன் இருத்தல்.
(iii) துணிச்சலுடன் செயல்படுதல்.
(iv) நல்ல செயல்களைச் செய்தல்.
(v) கோபத்தை தவிர்த்தல்.
(vi) பிறர் துயர் களைதல்.
(vii) பிறர் துயர் பேணுதல்.
(viii) அறச் செயல்களை செய்தல்.
(ix) பிறர் குற்றத்தை மன்னித்தல்
(x) இனிமையாகப் பேசுதல்
(xi) உண்மையை மட்டும் பேசுதல்.
(xii) விழிப்புணர்வுடன் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. தீர்வன – நீங்குபவை
2. உவசமம் – அடங்கி இருத்தல்
3. நிழல் இகழும் – ஒளிபொருந்திய
4. பேர்தற்கு – அகற்றுவதற்கு
5. திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
6. தெளிவு – நற்காட்சி
7. திறத்தன – தன்மையுடையன
8. கூற்றவா – பிரிவுகளாக
9. பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
10. பிணி – துன்பம்
11. ஓர்தல் – நல்லறிவு
12. பிறவார் – பிறக்கமாட்டார்

நிரப்புக :

1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன ……………………
2. உள்ளத்தில் தோன்றும் ………………….. ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்று நம் முன்னோர் கூறினர்.
3. உள்ள நோயை நீக்குபவை ……………………..
4. ‘தீர்வனவும் தீராத் திறத்தனவும்’ என்ற பாடலடி இடம்பெறும் நூல் ………………. சருக்கம் …………………..
5. நீலகேசி …………………….. ஒன்று.
6. சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் …………….
7. நீலகேசியில் உள்ள சருக்கங்கள் …………………..
Answer:
1. நோய்கள்
2. தீய எண்ணங்களால்
3. அறக்கருத்துகள்
4. நீலகேசி, தருவுரைச் சருக்கம்
5. ஐஞ்சிறுகாப்பியங்களுள்
6. நீலகேசி
7. பத்து

விடையளி :

Question 1.
நீலகேசி – குறிப்பு எழுதுக.
Answer:
(i) நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
(ii) இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
(iii) கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
(iv) சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை .

நூல் வெளி
நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . நீலகேசிக் காப்பியத்தின் தருவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒரு வகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

Also Read : Chapter-3.2---Varumun-kappom-Chapter-3-Term-1-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen