Question 1.
Answer:
1. வல்லினம் வருமா
2. வல்லினம் இடலாமா
3. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
4. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும் , மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
மொழியை ஆள்வோம்
படித்துச் சுவைக்க.
மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம்
மணிபல்லவத் தீவிற்குப் பறந்து சென்றோம்
குயில்மொழியாம் கண்ணகியை அழைத்துச் செல்லக்
குன்றுக்கு வானவூர்தி வந்த தென்றே
உயில் போன்று நம்முன்னோர் எழுதி வைத்த
உண்மைகளான அறிவியலின் அற்பு தத்தைப்
பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம்
பார்தன்னில் நனவாகக் காணுகின்றோம்! …………….- பாவலர் கருமலைத்தமிழாழன்
மொழிபெயர்க்க:
Bottle xylophone, Make music with bottles.
You will need: 6 glass bottles, Wooden spoon, Wter, Food coloring.
Water music
Hitting the bottles with the spoon makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.
கண்ணாடிப் புட்டிகளாலான இசைக்கருவி.
கண்ணாடி புட்டிகள் மூலம் இசையை உருவாக்குதல்.
தேவையான உபகரணங்கள்:
செய்முறை:
தண்ணீர் இசையாகிறதா?
பின்வரும் பத்தியில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பாக நுனியில். கசப்பு – உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால்தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம். மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. (ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா)
Answer:
கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.
ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லையே’. ‘ஏன்? என்னாச்சு?’ என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.
‘எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை , பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.’
இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, ‘ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்’ என்றது உற்சாகமாக.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது- ‘உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித்தரும்.’
Answer:
உரையாடல்
(கடற் கரையோரம் அலையிலிருந்து மீண்டு வந்தன இரண்டு சிப்பிகள்)
சிப்பி 1: வலி தாங்கமுடியவில்லையே? என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிப்பி 2: ஏன்? என்ன ஆச்சு; நேற்று நன்றாகத் தானே இருந்தாய்; இன்றைக்கு என்ன ஆனது?
சிப்பி 1: என் வயிற்றுக்குள் ஏதோ கனமான உருண்டை பந்து உருளுவது போல இருக்கிறது. அதனால் தாங்க முடியாத வலி….
சிப்பி 2: எனக்கு எந்த வலியும் இல்லை! நல்ல வேளை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை! நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
(அடுத்த அலையிலிருந்து கரையில் மீண்டு நின்றது ஒரு நண்டு)
நண்டு: (2வது சிப்பியிடம்) அந்த சிப்பி வலியால் துடிக்கிறது. உனக்கு எந்த வலியும் இல்லை ;
“நன்றாக இருக்கிறேன்” என்று சொல்கிறாய்? வலியைத் தாங்க விருப்பமில்லை என்கிறாய். வலியைத் தாங்கத் தயராக இல்லை என்கிறாய்? அப்படி என்றால் நீ வெறுமையாகக் கிடக்க வேண்டியது தான்.
சிப்பி 2: ஏன் வலி வந்தால் என்ன வாகும்? எனக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன.
நண்டு: அந்த நண்டுக்கு வலி சிரமப்படுத்தும். ஆனால் சில நாள்களில் அதன் வயிற்றிலிருந்து ஒரு அழகான முத்தாக வெளிவரும். அந்த முத்து எல்லோருக்கும் பெருமை தேடித்தரும்.
செய்து கற்க.
Question 1.
செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள ஒரு வாரத்திற்குரிய அறிவியல் செய்திகளைப் படித்துக் குறிப்பெடுக்க.
Answer:
நாள்: 14.4.18
சனிக்கிழமை
தினமணி
சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து புதிய செயலி உருவாக்கிய திண்டுக்கல் மாணவர்களுக்கு முதல்பரிசு.
சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைப் பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு செல்வதற்கான புதிய செயலி மற்றும் இணைய முகவரி உருவாக்கி இருக்கின்றனர் மாணவர்கள்.
நாள்: 14.4.18
சனிக்கிழமை
தி இந்து
மம்மி பூனை
எகிப்தில் பூனை கடவுளின் ஒரு வடிவம். அரசர் குடும்பத்தைப் போலவே பூனைகளையும் பாடம் பண்ணிக் காத்துவந்தனர். பிரமிடுகளிலுள்ள சுவற்றில் புனிதப் பூனைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி பிரபல சூழலியல் எழுத்தாளர். சு. தியோடர் பாஸ்கரன் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.
நாள்: 13.4.18
வெள்ளிக்கிழமை
தினமணி
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். I ஐ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம். செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி.41. ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அதன் தலைவர் சிவன் கூறினார்.
(இதுபோன்று, அன்றாடச் செய்தித்தாள்களில் வெளியாகும் அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து படித்துக் குறிப்பெடுத்துக் கொள்க)
Question 2.
அங்காடியில் வாங்கிய உணவுப் பொருளின் உருவாக்க நாள், முடிவு நாள், உறையில்
அச்சடிக்கப்பட்ட உணவுப்பொருளின் ஆற்றல், குறியீட்டுப் பட்டை (Barcode) ஆகியவற்றின் விவரங்களைக் கொண்டு உணவுப் பொருளின் உண்மைத்தன்மையை எப்படி அறிவது?
Answer:
நாம் அங்காடிக்குச் சென்று, உணவுப்பொருள், குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருள்கள் போன்றவற்றை வாங்கும்போது, அதன் உறைகளிலோ அல்லது மேல் அட்டைப் பெட்டியிலோ குறியீட்டு பட்டை (Barcode) அமைந்திருக்கும், அதன் உண்மைத் தன்மையை ஆராயும் முறை. குறியீட்டுப் பட்டை இடம் பெற்றிருக்கும் பகுதியை கணினியுடன் கூடிய ஒளிக் கதிர் மூலம் வருடும் போது (Scanning) அப்பொருளின்
நயம் பாராட்டுக.
பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி! ……………..- பாரதிதாசன்.
Answer:
பாரதிதாசனார் 29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். இவர் பெற்றோர் கனகசபை; இலக்குமி அம்மாள். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம். பாரதியார் புதுவையில் வாழ்ந்த போது, அவருடன் நட்புக் கொண்டு, அவர் மீது கொண்ட அன்பு காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் எனப் புனைந்து கொண்டார்.
இவர் குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம் முதலான தொண்ணூற்றுக்கும் மேலான நூல்களை இயற்றியுள்ளார்.
பாடலின் மையக்கருத்து:
இயற்கையை வருணித்துப் பாடுவதில் வல்லவர். இப்பாடலில், சூரியனை பல்வேறு வடிவங்களில் வருணித்துப்பாடுகிறார். உலகெங்கும் இருளைப் போக்கி தன் ஒளி அளாவ சுடர்க்கைகள் நீட்டி ஊன்றுகின்றது.
பாடலின் திரண்டகருத்து:
கடலுக்குள்ளிருந்து பொங்கிப் பொழிந்து பிடரிமயிர் சிலிர்க்க வரும் சிங்கம் போல வருகிறாய் நீ! வானத்தில் திகுதிகு என எரிக்கும் தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தங்கத் தட்டே! வானத் தகளியற் பெரு விளக்கே!
கடலில் உன் கோடிக் கைகளை ஊன்றுகின்றாய் நெடுவானில் சுடர்க்கைகளை நீட்டுகிறாய். இடையில் தென்படுகின்ற மலை, காடு, இல்லம், பொய்கை, ஆறு அத்துணையிலும் உன் ஒளி அளாவுகின்றது. கதிரவனே! நீ வாழ்க.
நயம்:
பாடவந்த பொருள் பற்றி மட்டும் பாடாமல் செய்யுளுக்கேயுரிய பல்வேறு நயங்களையும் உடன் அமைத்துப் பாடியிருக்கிறார்.
எதுகை நயம்:
அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரப் பாடுவது எதுகை நயம் ஆகும்.
எடுத்துக்காட்டு:
கவிஞர் அடிதோறும் எதுகை நயம் அமைத்துச் செய்யுளுக்குச் சொல்லழகு ஊட்டியிருக்கிறார்.
மோனை நயம்:
அடிதோறும் சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
காட்டுக்கு அழகு யானை
பாட்டுக்கு அழகு மோனை என்பது போல மோனைத் தொடர்களை அமைத்துப் பாடியிருக்கிறார்.
எடுத்துக்காட்டு:
அணி நயம்:
வனிதைக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு – என்றாற் போல கவிஞர்கள் தாம் சொல்ல வந்த பொருளைச் சுவைஞர்களின் இன்பத்திற்கேற்பப் பயன்படுத்துவார்கள்.
பாரதிதாசன் பரிதியைப்(சூரியனை) பல்வேறு உருவகங்களாகக் காட்சிப் படுத்துகிறார். எனவே இச்செய்யுளில் உருவக அணி பயின்றுவந்துள்ளது.
எடுத்துக்காட்டு:
இயைபு நயம்:
பாட்டுக்கு ஓசையின்பம் தருவது இயைபுநயம். இப்பாடலில் கவிஞர், அடிதோறும் இறுதிச் சீர் ஒன்றிணைய இயைபு நயம் அமைய இயைத்துப் பாடியிருக்கிறார்.
எடுத்துக்காட்டு:
மயிர்சிலிர்க்கும், என எரிக்கும், குன்றே, பெருவிளக்கே
இவ்வாறாகப் பல்வேறு நயங்களை அமைத்துப் பரிதியின் சுடரை விளக்கிக் காட்டுகிறார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் மாலைக் கால வருணணை போன்று இப்பாடல் அமைந்து விளங்குகிறது.
மொழியோடு விளையாடு
குழுவில் விளையாடுக.
எ.கா.
மாணவர் 1 : கணினி
மாணவர் 2 : அறிவியல்
மாணவர் 3 : தமிழ்
மாணவர் 4 : மொழி
சொல்லப்பட்ட சொற்கள்: கணினி, அறிவியல், தமிழ், மொழி
தொடர்: அறிவியல், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்துத் தமிழ் மொழி வளர்ந்து வருகிறது.
Answer:
மாணவர்களே இவ்வாறாக உங்கள் நண்பர்களுடன் விளையாடும்போது உங்கள் மொழி அறிவு வளரும்.
அகராதியில் காண்க.
இமிழ்தல், இசைவு, துவனம், சபலை, துகலம்
Answer:
இமிழ்தல் – இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
இசைவு – இணக்கம், சம்மதி, பொருத்து தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
துவனம் – அக்கினி, நெருப்பு
சபலை – இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
துகலம் – பங்கு
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக. (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)
அ) எண்ணெய் ஊற்றி ……………. விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
ஆ) எனக்கு ……………. பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
இ) கைப்பொருளைக் கடல் ……………. யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
ஈ) வீட்டு ……………. ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து ……………. உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
உ) எழுத்தாணிகொண்டு ……………. தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
Answer:
அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
இ) கைப்பொருளைக் கடல் அலை யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
ஈ) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
உ) எழுத்தாணிகொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
குவிந்து – குவித்து; சேர்ந்து – சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து – பொருத்து; மாறு – மாற்று.
(எ.கா) விரிந்தது – விரித்தது
அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
ஆ) ……………………………………………………………………………………………………
ஈ) ……………………………………………………………………………………………………
உ) ……………………………………………………………………………………………………
ஊ) ……………………………………………………………………………………………………
Answer:
அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
ஆ) ஆற்றில் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை வீட்டுக்கு முன்பு குவித்து வைத்தோம். கையில் காசு சேர்ந்தது; சேர்ந்த காசுகளைச் சிறுசேமிப்பில் சேர்த்து வைத்தோம்.
ஈ) ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்து நடந்தனர். விடுமுறையில் இன்னின்ன பாடங்களைப் படித்து வருமாறு பணித்திருக்கிறார்.
உ) பின்வரும் சொற்களைப் பின்குறித்த பிறசொற்களோடு பொருந்துமாறு பொருத்திக் காட்டுக.
ஊ) பிறருடைய தீயவழியில் இருந்து நீ மாறு; அவர்களை உன் வழிக்கு மாற்று.
காட்சியைக் கண்டு கவினுற கருத்தளிக்க.
செயல்திட்டம்
மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு முழக்கத்தொடர்களை எழுதி வகுப்பறையிலும் பள்ளியிலும் காட்சிப்படுத்துக.
Asnwer:
மின்சார சேமிப்புப் பற்றிய முழக்கத் தொடர்கள்:
1. மின் இயந்திரங்களைத் தவிர்ப்போம்
மின்சாரம் சேமிப்போம் – நம்
ஆரோக்கியத்தையும் காப்போம்.
2. மின்சார சேமிப்பு மின்சார உற்பத்திக்குச் சமமாகும்.
3. நீராதாரம் பெருக்குவோம் மின்
உற்பத்தியையும் பெருக்குவோம்.
4. ஆள் இல்லா அறைகளில்
மின் விசிறி இயக்காதீர்.
5. மின்சார சிக்கனம்
தேவை இக்கணம்.
6. குழல் விளக்கையும்
குண்டு விளக்கையும்
தவிர்ப்போம்.
மின்சாரம் சேமிப்போம்.
நிற்க அதற்குத்தக….
என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது
1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.
5. என் தங்கையோடு போட்டிபோடாமல் ஆண், பெண் வேறுபாடின்றி உரிமையைச் சமமாகப் பெற செய்வேன்.
6. நான் குடியிருக்கும் தெருவில் குப்பைக் கூளங்கள் தேங்காதவாறு பார்த்துக் கொண்டு பிறர்க்கு முன்மாதிரியாக நடந்து கொள்வேன்.
Answer:
1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. …………………………………………………………………………………………………………………………………………………………………….
5. …………………………………………………………………………………………………………………………………………………………………….
6. …………………………………………………………………………………………………………………………………………………………………….
கலைச்சொல் அறிவோம்
ஏவு ஊர்தி – Launch Vehicle
பதிவிறக்கம் – Download
ஏவுகணை – Missile
பயணியர் பெயர்ப் பதிவு – PNR (Passenger Name Record)
கடல்மைல் – Nautical Mile
மின்னணு இயந்திரங்கள் – Electronic devices
காணொலிக் கூட்டம் – Video Conference
பாடநூல் வினாக்கள்
சிறுவினா
Question 1.
வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
செடிகொடி என்பதற்கும்
செடிக்கொடி என்பதற்கும் வேறுபாடு உண்டு.
செடிகொடி என்னும் தொடருக்கு செடியும் கொடியும் என்பது பொருள்
செடிக்கொடி என்னும் தொடரானது செடியில் ஏறியுள்ள
கொடி என்றே பொருள்.
செடி கொடி என்று எழுதும் போது செடி + உம் கொடி + உம் எனப் பிரித்து எழுதுவது ‘உம்’ என்ற சொல் தொக்கி வருவதால் உம்மைத்தொகை எனப்படும்.
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
எழுத்துகள் – எழுத்துக்கள் – இவற்றில் எது சரி?
இதே போல கருத்துக்கள், வாக்குக்கள், வாழ்த்துக்கள் விளக்குக்கள் இவற்றில் வரும் வல்லினம் மிகுமா?
விகுதிப் புணர்ச்சியில், கருத்து + கள் (விகுதி) வல்லெழுத்துக்குப்பின் வரும் வலி மிகுவதற்கு இலக்கணத்தில் எந்த விதியும் இல்லை.
வல்லெழுத்து (க், ச், த், ப்) ஏன் மிக வேண்டும்?
பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும் தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.