Question 1.
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே
இவை போன்ற பொன்மொழிகள் எழுதி வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
புத்தகம் பற்றிய பொன் மொழிகள்
Question 2.
சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ஆம் நாள் தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்படுவதன் காரணத்தை அறிக.
Answer:
தேசிய நூலக நாள் – காரணங்கள்
Question 3.
நூலகத்தில் கவிதை, கதை முதலிய நூல்களை நூலாசிரியர் வரிசையிலும் நூலின் அடையாளக் குறியீட்டு எண் அடிப்படையிலும் எவ்வாறு தேடுவது என்பதைத் தெரிந்துகொள்க.
Answer:
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
1. ஆ, இ சரி; அ தவறு
2. அ, இ, சரி; ஆதவறு
3. மூன்றும் சரி
4. மூன்றும் தவறு
Answer:
3) மூன்றும் சரி
குறுவினா
Question 1.
நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
Answer:
நெடுவினா
Question 1.
நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
Answer:
முன்னுரை:
மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலை” என்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.
நூலகம்:
ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .
“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.
வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.
நூல்கள் :
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.
பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.
ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .
முடிவுரை :
கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.
“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”
என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்……………..
அ) அறிஞர் அண்ணா
ஆ) காந்தியடிகள்
இ) ஆபிரகாம் லிங்கன்
ஈ)வின்சென்ட் சர்ச்சில்
Answer:
இ) ஆபிரகாம் லிங்கன்
Question 2.
அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது …………
அ) நூலகம்
ஆ) அருங்காட்சியகம்
இ) நினைவில்லம்
ஈ) பூங்கா
Answer:
அ) நூலகம்
Question 3.
வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்.
அ) தொலைக்காட்சி உரை
ஆ) இலக்கியச் சொற்பொழிவு
இ) வானொலி உரை
ஈ) அரசியல் மேடைப் பேச்சு
Answer:
இ) வானொலி உரை
Question 4.
தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………..
அ) காமராஜர்
ஆ) தந்தை பெரியார்
இ) அறிஞர் அண்ணா
ஈ) திரு.வி.க
Answer:
இ) அறிஞர் அண்ணா
Question 5.
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 2010
ஆ) 2012
இ) 2014
ஈ) 2013
Answer:
அ) 2010
Question 6.
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
அ) 2006
ஆ) 2008
இ) 2009
ஈ) 2010
Answer:
இ) 2009
Question 7.
இருமொழிச்சட்டத்தை உருவாக்கியவர் யார்?
அ) காமராஜர்
ஆ) மு.கருணாநிதி
இ) அறிஞர் அண்ணா
ஈ) எம்.ஜி.ஆர்
Answer:
இ) அறிஞர் அண்ணா
Question 8.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) உலகின் மிகப் பெரிய நூலகம் – 1. சரசுவதி மகால் நூலகம்
ஆ) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் – 2. கன்னிமரா நூலகம்
இ) தமிழ் நூல்கள் அதிகமாக உள்ள நூலகம் – 3. தேசிய நூலகம், கொல்கத்தா
ஈ) ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்- 4. லைப்ரரி ஆப் காங்கிரஸ், அமெரிக்கா
அ) 1, 4, 3, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3,1
ஈ) 3, 2, 4, 1
Answer:
ஆ) 4, 3, 2, 1
Question 9.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்………………..
அ) சரசுவதி மகால்.
ஆ) கன்னிமரா.
இ) தேசிய நூலகம், கொல்கத்தா.
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்.
Answer:
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்
குறுவினா
Question 1.
அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் இரண்டினைக் கூறுக.
Answer:
Question 2.
அறிஞர் அண்ணா இதழாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:
Question 3.
அறிஞர் அண்ணா துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:
சிறுவினா
Question 1.
அண்ணாவின் புகழ்பெற்ற மொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுக?
Answer:
· மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு .
· கத்தியைத் தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு
· இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்
· நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
· சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
· பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.