SaraNextGen.Com

Chapter 9.2 - Akkarai - Chapter 9 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.2 அக்கறை

Question 1.
நிலா, மழை, காற்று, தண்ணீர் போன்றவை குறித்து புதுக்கவிதைகளைத் திரட்டி இலக்கிய மன்றத்தில் படித்துக் காட்டுக.
Answer:

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
அ) ஒரு சிறு இசை
ஆ) முன்பின்
இ) அந்நியமற்ற நதி
ஈ) உயரப் பறத்தல்
Answer:
அ) ஒரு சிறு இசை

சிறுவினா

Question 1.
“பழங்களை விடவும் நசுங்கிப் போனது” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம்:
இக்கூற்று (இவ் அடி) கல்யாண்ஜி எழுதியுள்ள “அக்கறை” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்:
மிதிவண்டி ஓட்டி வந்த தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ. கூடையில் இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல் வேலை இருப்பதாய், அனைவரும் கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது. பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது.

Question 2.
மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
Answer:

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோர் எந்த நாட்டு தத்துவஞானிகள்?
அ) எகிப்து
ஆ) கிரேக்கம்
இ) இத்தாலி
ஈ) இஸ்ரேல்
Answer:
ஆ) கிரேக்கம்

Question 2.
கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் யாது?
அ) கல்யாணராமன்
ஆ) கல்யாணசுந்தரம்
இ) கலியுகராமன்
ஈ) கலியபெருமாள்
Answer:
ஆ) கல்யாணசுந்தரம்

Question 3.
கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?
அ) வாணிதாசன்
ஆ) வண்ண தாசன்
இ) தமிழ்தாசன்
ஈ) பிச்சை
Answer:
ஆ) வண்ண தாசன்

Question 4.
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
Answer:
இ) 2016

Question 5.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?
அ) புலரி
ஆ) ஆதி
இ) உயரப்பறத்தல்
ஈ) ஒரு சிறு இசை
Answer:
ஈ) ஒரு சிறு இசை

Question 6.
பொருத்திக்காட்டுக:
அ) ஒளியிலே – கடிதத்தொகுப்பு
ஆ) சில சிறகுகள் சில பறவைகள் – கட்டுரைத் தொகுப்ப
இ) அந்நியமற்ற நதி – சிறுகதைத் தொகுப்பு
ஈ) அகமும் புறமும் – கவிதைத் தொகுப்பு
அ) 3, 1, 4, 2
ஆ) 1, 2, 4, 3
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
வண்ணதாசன் என்னும் புனை பெயரில் எழுதுபவர் யார்? அப்பெயரில் எவ்விலக்கியத்தில் பங்களித்து வருகிறார்?
Answer:

  • கல்யாண்ஜி
  • கதை இலக்கியத்தில் ‘வண்ணதாசன்’ என்னும் பெயரில் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

சிறுவினா

Question 1.
கல்யாண்ஜியின் கவிதை நூல்களை எழுதுக.
Answer:

  • புலரி
  • முன்பின்
  • ஆதி ஆகியவையாகும்.
  • மணல் உள்ள ஆறு
  • அந்நியமற்ற நதி

Question 2.
கல்யாண்ஜியின் சிறுகதை நூல்களை எழுதுக.
Answer:

· கலைக்க முடியாத ஒப்பனைகள்.

· தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்.

· உயரப் பறத்தல்.

· ஒளியிலே தெரிவது போன்றவையாகும்.

Also Read : Chapter-9.3---Kuruntokai-Chapter-9-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen