SaraNextGen.Com

Chapter 5.2 - Niti venpa - Chapter 5 10th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.2 நீதி வெண்பா

Detailed Solutions Of Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.2 நீதி வெண்பா

Question 1.
எதிர்காலத்தில் நீங்கள் பயில விரும்பும் கல்வி குறித்து வகுப்பறையில் கலந்துரையாடிக் குறிப்புரை உருவாக்குக.
Answer:
ஆசிரியர் : கலை, நீ வருங்காலத்தில் என்னக் கல்வி பெற விரும்புகிறாய்?
கலை : அம்மா, நான் இளங்கலைத் தமிழ் படிக்க விரும்புகின்றேன். ஏனென்றால், உலகமே போற்றும் செந்தமிழ்த்தாயின் பெருமையை நான் அறிந்துகொள்ளவே கற்கின்றேன்.
ஆசிரியர் : நன்று. லில்லி நீ என்ன கற்க விரும்புகிறாய்?
லில்லி : அம்மா, நான் மருத்துவம் படிக்க விரும்புகின்றேன். ஏனென்றால், ஏழைகளுக்கு இலவசமாக உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக.
ஆசிரியர் : நல்லது, நல்லது. சமீனா நீ என்ன கற்க விரும்புகிறாய்?
சமீனா : அம்மா, நான் சட்டம் படிக்க விரும்புகின்றேன். ஏனென்றால், ஏழைகளுக்கு இலவசமாக சட்டஉதவி செய்வதற்காக.
ஆசிரியர் : ஓ! அப்படியா!
செல்வி : அம்மா, நான் வரலாறு படிக்க விரும்புகின்றேன். ஏனென்றால், பலவகையில் மறைந்துள்ள நம் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதற்காக.
ஆசிரியர் : நல்லது. உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தைப் படிக்க வைக்க வேண்டும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அருந்துணை என்பதைப் பிரித்தால் …………………
அ) அருமை + துணை
ஆ) அரு + துணை
இ) அருமை + இணை
ஈ) அரு + இணை
Answer:
அ) அருமை + துணை

Question 2.
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ்
ஆ) அறிவியல்
இ) கல்வி
ஈ) இலக்கியம்
Answer:
இ) கல்வி

குறுவினா

Question 1.
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
Answer:
கற்போம்! கற்போம்!
அருளைப் பெருக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
அறிவினைப் பெற கற்போம்!
கற்போம்! கற்போம்!
மயக்கம் விலக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

பெருக்கி – வினையெச்சம்
திருத்தி – வினையெச்சம்
அகற்றி – வினையெச்சம்
அருந்துணை – பண்புத்தொகை
போற்று – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.

பலவுள் தெரிக

Question 1.
‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை

Question 2.
‘கற்றவர் வழி அரசு செல்லும்’ என்று கூறும் இலக்கியம்…………………
அ) காப்பிய இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சங்க இலக்கியம்
ஈ) நீதி இலக்கியம்
Answer:
இ) சங்க இலக்கியம்

Question 3.
‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…………………
அ) சதாவதானி
ஆ) தசாவதானி
இ) மொழி ஞாயிறு
ஈ) கவிமணி
Answer:
அ) சதாவதானி

Question 4.
‘ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ என்று கூறியவர் யார்?
அ) ஒளவையார்
ஆ) கபிலர்
இ) திருவள்ளுவர்
ஈ) செய்குதம்பிப் பாவலர்
Answer:
இ) திருவள்ளுவர்

Question 5.
செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை…………………
அ) ஓவியம்
ஆ) சதாவதானம்
இ) நாட்டியம்
ஈ) சிற்பம்
Answer:
ஆ) சதாவதானம்

Question 6.
செய்குதம்பிப் பாவலரின் மாவட்டம் ………………… வட்டம்…………………
அ) கன்னியாகுமரி, இடலாக்குடி
ஆ) தஞ்சாவூர், படைத்தலைவன்குடி
இ) கடலூர், மஞ்சக்குப்பம்
ஈ) சென்னை , மயிலாப்பூர்
Answer:
அ) கன்னியாகுமரி, இடலாக்குடி

Question 7.
செய்குதம்பிப் பாவலர் …………………வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.
அ) பத்து
ஆ) பதினைந்து
இ) பதினெட்டு
ஈ) இருபது
Answer:
ஆ) பதினைந்து

Question 8.
சதாவதானி என்ற பாராட்டப் பெற்றவர்…………………
அ) உமறுப்புலவர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) செய்குதம்பிப் பாவலர்
ஈ) படிக்காத புலவர்
Answer:
இ) செய்குதம்பிப் பாவலர்

Question 9.
சதாவதானி என்பது…………………
அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
ஆ) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
இ) நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
ஈ) ஆயிரம் பேருக்கு உணவிடுவது
Answer:
அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது]

Question 10.
செய்குதம்பிப்பாவலர் சதாவதானி என்று பாராட்டுப் பெற்ற இடம்…………………நாள்…………………
அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10
ஆ) சென்னை தீவுத் திடல், 1909 மார்ச் 8
இ) தஞ்சாவூர் திலகர் திடல், 1908 பிப்ரவரி 8
ஈ) திருச்சி அண்ணா மைதானம், 1906 மார்ச் 6
Answer:
அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10

Question 11.
செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்…………………
அ) கன்னியாகுமரி
ஆ) இடலாக்குடி
இ) சென்னை
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) இடலாக்குடி

Question 12.
‘சதம்’ என்றால் ………………… என்று பொருள்.
அ) பத்து
ஆ) நூறு
இ) ஆயிரம்
ஈ) இலட்சம்
Answer:
ஆ) நூறு

Question 13.
தோண்டும் அளவு நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறுவது…………………
அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) ஏலாதி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) திருக்குறள்

குறுவினா

Question 1.
ஏன் கல்வியைப் போற்றிக் காக்க வேண்டும் எனச் செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?
Answer:
அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே, அதைப் போற்றிக் கற்க வேண்டும் எனச் செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்.

Question 2.
சதாவதானம் குறிப்பு வரைக.
Answer:
‘சதம்’ என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.

Question 3.
செய்குதம்பிப் பாவலர் ஏன் சதாவதானி என்று போற்றப்படுகிறார்?
Answer:
செய்குதம்பியார் 1907 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டப் பெற்றார். அன்று முதல் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

Question 4.
செய்குதம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : செய்குதம்பிப் பாவலர்
காலம் : 1874 – 1950
ஊர் : கன்னியாகுமரி – இடலாக்குடி
சிறப்பு : 15 வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றல், 1907இல் சதாவதானி பட்டம் பெற்றார்.

Also Read : Chapter-5.3---Tiruvilaiyatar-puranam-Chapter-5-10th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen