SaraNextGen.Com

Chapter 8.1 - Canka ilakkiyattil aram - Chapter 8 10th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Detailed Solutions Of Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Question 1.
‘பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக் கருத்துக்களை வலியுறுத்தும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச் செய்திகளை எழுதுக.
Answer:
சங்க இலக்கியப்பாடலடிகள் கீழ்க்காணும் ஐந்தின் அடிப்படையில் அறச்செய்திகளைவலியுறுத்துகிறது.

  • வறுமை
  • நிலையான செல்வம்
  • நேரிய ஆட்சி
  • வாய்மை
  • ஈகை

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்…… – புறநானூறு

இப்பிறப்பில் அறம் செய்தால், அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’

மன்னருடைய செங்கோலும் வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசின் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்.

‘செல்வத்துப் பயனே ஈதல்’ – புறநானூறு

வீரத்தைப் போலவே ஈகையையும் தமிழ் நூல் போற்றியது. ஈகையும் ஓர் அறச்செயலே. செல்வத்தின் பயன் கொடுத்து மகிழ்வதே என்று வாழ்ந்தனர்.

‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’ – நற்றிணை

பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவுதலே பண்பு. பிறர் துன்பம் தீர்ப்பதே உண்மையான
செல்வம் ஆகும்.

‘பிழையா நன்மொழி’ – நற்றிணை

மெய் பேசுவது நன்மொழியாகும் வாய்மை எனப்படுவது தவறியும் பொய் பேசாதிருத்தல். நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது.

Question 2.
கொன்றை வேந்தன் முதலான பிற்கால அறநூல்களின் பெயர்களை அறிந்து, அவற்றுள் ஏதேனும் ஒரு நூலின் அறக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவை இன்றும் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடுபவர்கள் : சோமு, கலா, மாலா,

சோமு : நானும் நலம்தான் சரி நாம் இன்றைக்கு வகுப்பில் அறக் கருத்துக்கள் பற்றிப் படித்தோம் அல்லவா, அதைப் போலவே எளிமையான அறக்கருத்துக்களை நாம் புரிந்து கொள்ளும் வகையில் சில நூல்கள் கூறுகிறது. அதனைப் பற்றிப் பேசுவோமா.
கலா : எனக்கு கொன்றை வேந்தன் மிகவும் பிடிக்கும்
மாலா : எனக்கும்தான்….
சோமு : அதைப்பற்றிப் பேசுவோம். இந்நூல் அகரநிரல் அமைப்புப்படி 91 ஒற்றை வரிப் பாக்களால் ஆனது
கலா : அதை எழுதினது ஒளவைதானே.
மாலா : சரியாகச் சொல்லி விட்டாயே!

சோமு : அந்த நூலில் ஈகை என்னும் அறத்தைப் பற்றி ஒரு வரி உணர்த்துகிறது. அது என்ன தெரியுமா?
கலா : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்’
சோமு : சரியாகச் சொன்னாய்.
மாலா : ஆமாடா நாம் ஒருவருக்கும் கொடுக்காமல், யாருக்கும் நன்மை செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் யாருக்கும் பயன்படாது, அதனை திருடரோ மற்றவரோ கொள்வர்.

கலா : எங்கள் பக்கத்து ஊரில் மிகப் பெருஞ்செல்வந்தர். வேலை பார்ப்பவருக்குக் கூட கூலி ஒழுங்காத் தர மாட்டார். இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிடுவார். ஒரு நாள் வந்த திருடன் பெட்டியை உடைத்து அத்தனையும் கொள்ளையடித்து விட்டான்.
சோமு : புரிந்து கொண்டீர்களா தோழிகளே! எக்காலத்திலும் அறக்கருத்துகள் எப்போதும், முக்காலத்துக்கும் பொருந்துவனவாகவே உள்ளது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மேன்மை தரும் அறம் என்பது………………
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.
இ) புகழ் கருதி அறம் செய்வது.
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.
Answer:
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.

Question 2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………………….
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Answer:
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

சிறுவினா

Question 1.
குறிப்பு வரைக: அவையம்.
Answer:

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு.
  • உறையூரிலிருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது.

Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:

நீர் நிலையைப் பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதும் அரசனின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:

அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:
தமிழர்போர்செய்வதிலும் அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது, வீரமற்றோர், சிறார், முதியோர் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதில் அறம்:

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது, தன்னைத் தாண்டி பிறரைப் பற்றிச் சிந்திக்கும் நிலை.
  • ‘பிழையா நன்மொழி’ என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய்பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.

இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.

நெடுவினா

Question 1.
பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

உறவினருக்கு மடல்

திருச்சி,
18.03.2020

அன்புள்ள சித்தப்பாவிற்கு இரகு எழுதுவது,

நலம். நலம் அறிய ஆவல்.

நான் இன்று மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏன் தெரியுமா? நேற்று வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் பயம்! ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே. பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டுவிட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று, மறுநாளே காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையைப் பாராட்டி, சன்மானத் தொகையைப் பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமில்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு இரகுவே’ சான்று என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடனும், சித்தி, தங்கையுடனும் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
இரகு.ம.

உறைமேல் முகவரி:

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..
அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்

Question 2.
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

Question 3.
சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

Question 4.
மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

Question 5.
உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 6.
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

Question 7.
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

Question 8.
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

Question 9.
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

Question 10.
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

Question 11.
நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

Question 12.
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

Question 13.
தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

Question 14.
பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

Question 15.
இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Question 16.
காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

Question 17.
போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

Question 18.
சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

Question 19.
சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

Question 20.
பொருத்துக.
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 21.
பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

Question 23.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

Question 24.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

Question 25.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

Question 26.
குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Question 27.
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

Question 28.
தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

Question 29.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

Question 30.
சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

Question 31.
ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

Question 32.
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு

குறுவினா

Question 1.
அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?
Answer:
மன்னர்களுடைய செங்கோலும், வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.

Question 2.
அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?
Answer:

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.

Question 3.
தனிச்சிறப்புப் பெற்ற அவையம் எவை?
Answer:

  • உறையூரில் இருந்த அறஅவையம் தனிச் சிறப்புப் பெற்றிருந்தது.
  • மதுரையில் இருந்த அவையமும் சிறப்புப் பெற்று இருந்தது.
  • இவ் அவையங்கள் துலாக் கோல் போல் நடுநிலைமையுடன் இருந்தன.

Question 4.
மகிழ்ச்சி என்பதை விளக்குக.
Answer:

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து, மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி .
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

Question 5.
வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் கூறுக.
Answer:

  • ‘பொய்யாச் செந்நா’
  • ‘பொய்படு பறியா வயங்கு செந்நா’
  • ‘பிழையா நன்மொழி – நற்றிணை’
  • ‘பொய்மொழிக் கொடுஞ்சொல்’

என்று பொய் கூறக்கூடாது, வாய்மையே கூறவேண்டும் என்பதை இலக்கியங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

Question 6.
சங்க இலக்கியம் முதல் தரமான அறம் என்பதை விளக்குக.
Answer:

  • இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது.
  • சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமான அறம்.
  • தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாந்தரமான அறம்.
  • எனவே, சங்க இலக்கிய அறங்கள் இயல்பான முதல் தரமான அறம் என்பது சாலப் பொருந்தும்.

Question 7.
அற இலக்கியங்களில் ஈதல் பற்றிக் கூறப்பட்டுள்ளதை விளக்குக.
Answer:

  • புற இலக்கியங்களில் மட்டுமல்ல, அற இலக்கியங்களிலும் ஈகை பற்றிய செய்திகள் உள்ளன.
  • ஈயாமை இழிவு என அற இலக்கியம் கூறுகிறது.
  • இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கலித்தொகை கூறுகிறது.

Question 8.
கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.
Answer:

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அதியன்
  • மறுமை நோக்கி கொடுக்காதவன் – பேகன்
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்துக் கொடுப்பவன் – ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் – திருமுடிக்காரி.
  • இவ்வாறு மன்னர்கள் கொடையால் சிறந்திருந்தனர்.

Question 9.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் செம்மை சான்ற அமைச்சர் கடமையாகும்.

Question 10.
‘அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ என்ற புறநானூற்று வரிகளின் உட்கருத்தைப் புலப்படுத்துக.
Answer:
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. அத்தகைய நோக்கம் இல்லாதவன் வள்ளல் ஆய்.

Question 11.
அறங்கூறவையம் இருந்த இடங்கள் யாவை?
Answer:

  1. உறையூர்
  2. மதுரை

Question 12.
வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?
Answer:
இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன் என்றெல்லாம் வள்ளல்கள் போற்றப்பட்டனர்.

Question 13.
உதவியாண்மை என்ற சொல்லின் பொருள் மற்றும் அதனைக் குறிப்பிட்டவர் யார் என்பதைக் குறிப்பிடவும்?
Answer:
உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். ”

Question 14.
உண்மையான செல்வம் எது என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்?
Answer:
பிறர் துன்பம் தீர்ப்பது தான் உண்மையான செல்வம் என நல்வேட்டனார் குறிப்பிடுகின்றார்.

Question 15.
‘ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாக உள்ளன’ – இக்கூற்றில் சுட்டப்படும் ஆற்றுப்படை இலக்கியங்கள் யாவை?
Answer:

  • திருமுருகாற்றுப் படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • பொருநாராற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை

Question 16.
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பைப் புலப்படுத்துவன எவை?
Answer:
வள்ளல் எழுவரின் கொடைச்சிறப்பை சிறுபாணாற்றுப்படையும், பெருஞ்சித்திரனார் பாடல்களும் புலப்படுத்துகின்றன.

Question 17.
குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் என்று குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

Question 18.
“இல்லோர் ஒக்கல் தலைவன்’ யார் என்பதை விளக்குக.
Answer:
பொருள் இல்லாத ஏழைச் சுற்றத்திற்குத் தலைவன் வள்ளல்கள் ஆவர்.

Question 19.
கொடை என்பதும் ஓர் அறம் என்பதனை ஔவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கின்ற ஒளவையின் கூற்று கொடை என்பதும் ஓர் அறம் என்பதனைத் தெளிவாக்குகிறது.

சிறுவினா

Question 1.
உண்மையான செல்வம் எது?
Answer:
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்.
‘சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்’
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’
என்று நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.

Question 2.
சங்ககாலப் போர் அறம் குறித்து எழுதுக.
Answer:

  • தமிழர் போரிலும் அறத்தைப் பின்பற்றினர்.
  • போர் அறம் என்பது வீரமற்றோர் புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கும்.
  • பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போரிடுவதும் போர் அறமாகக் கருதப்பட்டது.

Question 3.
நோக்கம் கருதி அறம் செய்தல் கூடாது விளக்குக.
Answer:

  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருத்தல் கூடாது.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் மறுபிறப்பில் பயன் பெறலாம் என்று கருதியும் செய்தல் கூடாது.
  • நோக்கமின்றித் தரும் அறமே சிறந்த அறமாகும்.

Question 4.
கொடையின் சிறப்பை இலக்கியங்கள் போற்றுவது பற்றி எழுதுக.
Answer:

  • கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பு, சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் போற்றப்பட்டுள்ளது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகும்.
  • புறநானூற்றிலும் குறிப்பிட்ட மன்னர்களின் கொடைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

Question 5.
மகிழ்ச்சி பெருக என்ன செய்ய வேண்டும்?
Answer:

  • மனிதன் சமூகக் கடலின் ஒரு துளி.
  • மனிதன் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவு மகிழ்ச்சி பெருகும்.
  • இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்றால் மகிழ்ச்சி பெருகும்.

Question 6.
கொடை என்னும் பகுதியில் அமைந்த வள்ளல்கள் பெயரினைத் தொகுத்து எழுதுக.
Answer:

· பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

· அதியன்

· ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

· பேகன்

· குமணன்

· திருமுடிக்காரி

Also Read : Chapter-8.2---Nanam-Chapter-8-10th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen