SaraNextGen.Com

Chapter 1 - Cirupancamulam - Chapter 1 Term 3 5th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
வனப்பு – இச்சொல்லின் பொருள் ………………..
அ) அறிவு
ஆ) பொறுமை
இ) அழகு
ஈ) சினம்
Answer:
இ) அழகு

Question 2.
நன்றென்றல் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) நன் + றென்றல்
ஆ) நன்று + என்றல்
இ) நன்றே + என்றல்
ஈ) நன்றே + என்றல்
Answer:
ஆ) நன்று + என்றல்

Question 3.
என்று + உரைத்தல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ………….
அ) என்று உரைத்தல்
ஆ) என்றுயுரைத்தல்
இ) என்ற உரைத்தல்
ஈ) என்றுரைத்தல்
Answer:
ஈ) என்றுரைத்தல்

Question 4.
கண்ணுக்கு அழகு …….
அ) வெறுப்பு
ஆ) பொறுமை
இ) இரக்கம்
ஈ) பொறாமை
Answer:
இ) இரக்கம்

. பொருத்துக

1. கண்ணுக்கு அழகு – கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
2. காலுக்கு அழகு – இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
3. ஆராய்ச்சிக்கு அழகு – நாட்டு மக்களை வருத்தாமை
4. இசைக்கு அழகு – பிறரிடம் சென்று கேட்காமை
5. அரசனுக்கு அழகு – இரக்கம் காட்டல்
Answer:
1. கண்ணுக்கு அழகு – இரக்கம் காட்டல்
2. காலுக்கு அழகு – பிறரிடம் சென்று கேட்காமை
3. ஆராய்ச்சிக்கு அழகு – இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
4. இசைக்கு அழகு – கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
5. அரசனுக்கு அழகு – நாட்டு மக்களை வருத்தாமை

. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
…………………………., ………………………..
…………………………., ………………………..
Answer:

  • ண் வனப்பு
  • ண் வனப்பு
  • கேட்டார்
  • வாட்டான்

. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கண்ணுக்கு எது அழகு?
Answer:
கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளும் பண்பாகும்.

Question 2.
காலுக்கு எது அழகைத் தருகிறது?
Answer:
பிறரிடம் பொருளை வேண்டிச் செல்லாமல் இருப்பது காலுக்கு அழகைத் தருகிறது.

Question 3.
இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
Answer:
இசையைக் கேட்போர் அதனை நன்று என்று கூறுதல், இசைக்கு அழகாகும்.

Question 4.
அரசனுக்கு அழகைத் தருவது எது?
Answer:
தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல் அரசனுக்கு அழகைத் தரும்.

. சிந்தனை வினா.

நம்மைப் பிறர் பாராட்ட வேண்டுமெனில், நம்மிடம் எத்தகைய பண்புகள் -3 இருக்கவேண்டும்?
Answer:

  • மனித நேயம்.
  • பிறருடைய நலத்தைப் பற்றி அறிதல்.
  • பகைவனிடமும் அன்பு காட்டுதல்.
  • பிறர் செய்யும் தவற்றை மன்னித்து விட்டு அவருக்கே உதவியும் செய்தல்.
  • தம்மைவிட எளியவரிடமும் பணிவுடன் இருத்தல்.
  • பிற உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுதல்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை …………. அழகு தரும்.
அ) கைக்கு
ஆ) காலுக்கு
இ) கண்ணுக்கு
ஈ) காதுக்கு
Answer:
ஆ) கால்

Question 2.
இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல் …………. அழகு தரும்.
அ) ஆராய்ச்சிக்கு
ஆ) இசைக்கு
இ) காலுக்கு
ஈ) கண்ணுக்கு
Answer:
அ) ஆராய்ச்சிக்கு

Question 3.
சிறுபஞ்சமூலம் ………………நூல்க ளுள் ஒன்று.
அ) பதினென் கீழ்க்கணக்கு
ஆ) பத்துப்பாட்டு
இ) எட்டுத்தொகை
ஈ) சங்க இலக்கியம்
Answer:
அ) பதினென் கீழ்க்கணக்கு

Question 4.
சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் ………..
அ) கம்பர்
ஆ) பாரதியார்
இ) காரியாசான்
ஈ) கபிலர்
Answer:
இ) காரியாசான்

விடையளி :

Question 1.
சிறுபஞ்சமூலத்தில் குறிப்பிடப்படும் வேர்கள் யாவை?
Answer:
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி.

Question 2.
சிறுபஞ்சமூலம் குறிப்பு வரைக.
Answer:

  • சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் காரியாசான். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்கள் உடல் நோயைத் தீர்க்கும்.
  • அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள் மக்கள் மனநோயைத் தீர்ப்பனவாக உள்ளன.
  • ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

Question 3.
சிறுபஞ்சமூலம் கூறும் அழகுகளை எழுதுக.
Answer:

· கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளுதல்.

· காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை.

· ஆராய்ச்சிக்கு அழகு, இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்.

· இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல்.

· அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களை வருத்தமாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.

Also Read : Chapter-2---Varit-tanta-vallal-Chapter-2-Term-3-5th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen