SaraNextGen.Com

Chapter 4 - Inaiccorkal - Chapter 4 Term 3 5th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

. கீழ்க்காணும் தொடர்களில் பொருத்தமான இணைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
(ஈடும் எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக,
இன்பமும் துன்பமும், கீரியும்பாம்பும் )
1. பானைகள் ……………………………..  வைக்கப்பட்டிருந்தன.
2. நேற்றுவரை  …………………………….. போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.
3. தேர்வில்  …………………………….. படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.
4. வாழ்வில் …………………………….. உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.
5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு  ……………………………..  இருக்கும்.
Answer:
1. பானைகள் அடுக்கக்காக வைக்கப்பட்டிருந்தன.
2. நேற்றுவரை கீரியும்பாம்பும் போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.
3. தேர்வில் கண்ணுங்கருத்துமாக படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.
4. வாழ்வில் இன்பமும் துன்பமும் உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.
5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ஈடும்எடுப்புமாக இருக்கும்.

. விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. இன்பமும் – துன்பமும் – இன்பமும் துன்பமும்
2. அன்றும் – ……………………………. – ……………………………
3. அங்கும் –  ……………………………. – ……………………………
4. உயர்வும் –  ……………………………. – ……………………………
5. விண்ணும் –  ……………………………. – ……………………………
Answer:
1. இன்பமும் துன்பமும் – இன்பமும் துன்பமும்
2. அன்றும் இன்றும் – அன்றும் இன்றும்
3. அங்கும் இங்கும் – அங்கும் இங்கும்
4. உயர்வும் தாழ்வும் – உயர்வும்தாழ்வும்
5. விண்ணும் மண்ணும் – விண்ணும் மண்ணும்

கற்பவை கற்றபின்

Question 1.
நீங்கள் படிக்கும் நூல்களிலிருந்து இணைமொழிகளைத் தொகுக்க.
Answer:
இணை மொழிகள் :

Question 2.
இணைமொழிகளைப் பயன்படுத்தி, சிறு உரையாடல் எழுதுக.
Answer:
உரையாடல் :
அம்மா : முருகா! நான் கடைக்குப் போய்விட்டு வருகிறேன். நீங்க கிண்டலும் கேலியும் பண்றேன்னு சண்டை போடாதீங்க.
முருகன் : நாங்க சண்டையெல்லாம் போடமாட்டோம் நீ போய்விட்டு ஆர அமர வாம்மா.
அம்மா : சரி சரி! வீட்டைத் திறந்து விட்டுட்டு வீடு வீடாய்ப் போகாதீங்க.
முருகன் : ஓடியாடி விளையாடக் கூடாது. பேசக்கூடாது. என்னம்மா சொல்றீங்க.
அம்மா : இதெல்லாம் தங்குதடையின்றிப் பேசு. படிக்கச் சொன்னா மட்டும் படிக்காதே!
முருகன் : அக்கம்பக்கத்தில் பேசாதே என்று சொன்னீங்க, பேசறதே இல்லை. விளையாட போவதும் இல்லை.
அம்மா : சரி சரி! பத்திரமாக இரு.
முருகன் :நீ பத்திரமா போய்விட்டு வாம்மா! மழைக்காலம் சாலையெல்லாம் பல்லாங்குழி போல் மேடும் பள்ளமுமாய் உள்ளது.
அம்மா : சரி சரி!

Question 3.
இணைமொழிகள் வருமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:
(i) ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைப் பார்க்க கூட்டங்கூட்டமாய் மக்கள் வந்தனர்.
(ii) தஞ்சை பெரியகோவில் தலைமுறை தலைமுறையாய் நின்று தமிழரின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
(iii) மழையில்லாமல் பயிர்கள் வாடி வதங்கி உள்ளன.
(iv) குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும்.
(v) நாளும்கிழமையும் எவருக்காகவும் காத்திருக்காது.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. இணைச்சொற்கள் …………. என மூவகைப்படும்.
Answer:
நேரிணை, எதிரிணை, செறியினை

2. வாடிவதங்கி ………………. இணைச்சொல்
Answer:
நேர்

3. வெற்றியும் தோல்வியும் ………….. இணைச்சொல்
Answer:
எதிர்

4. பச்சைப்பசேல் ………………. சொல்
Answer:
செறியினைச்

மொழியை ஆள்வோம்

பேசுதல்

Question 1.
அன்றாட வாழ்க்கைச் சூழலில் நீங்கள் காணும் சிக்கல்கள் பற்றிக் கலந்துரையாடுக.
Answer:
மாணவன்-1 : என்னடா குமரா! இன்றைக்கு பள்ளிக்கு ஒன்பது மணிக்குத்தான் வந்தாய்? என்னவாயிற்று?
மாணவன்-2 : என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் வரும் வழியில் ஒரே போக்குவரத்து நெரிசல்.
மாணவன்-1 : கொஞ்சம் சீக்கிரம் புறப்படுவதுதானே!
மாணவன்-2 : சீக்கிரம்தான் புறப்படுகிறோம். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வேகமாக வரவே இயலவில்லை .

மாணவன்-1 : நீ சொல்வதும் சரிதான். இந்தச் சிக்கல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இப்பிரச்சனைகூட சீக்கிரம் புறப்பட்டு வந்தால் நேரத்துக்கு வந்துவிடலாம் என்ற தீர்வைத் தரும். குடிநீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு இவற்றையெல்லாம் என்ன சொல்வது?
மாணவன்-2 : ஆமாம்… ஆமாம்.
மாணவன்-1 : கொஞ்சம் மழை வந்தால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். கேட்டால் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனர்.

மாணவன்-2 : அதேபோல்தான் குடிநீரும், மழைக்காலத்தில் ஐம்பது சதவீதம் குழாய்களில் சேறும் சகதியும் கலந்து வருகிறது. கோடைக்காலத்தில் தண்ணீர் வருவதே இல்லை.
மாணவன்-1 : இந்தச்சிக்கல்கள் நமக்கு மட்டும் இல்லை. நகரவாசிகள் அனைவருக்கும் உள்ள சிக்கல்தான்.
மாணவன்-2 : இவற்றிற்குத் தீர்வு காண வேண்டுமானால் அரசாங்கம் செய்யட்டும் என்று எதிர்பார்க்காமல் பொதுமக்கள் சேர்ந்து ஆவன செய்ய வேண்டும்.
மாணவன்-1 : நாமும் நம்மால் இயன்றவரை இச்சிக்கல்கள் தீர பணிபுரிவோம் என உறுதியேற்போம்.

Question 2.
உங்கள் மனம் கவர்ந்த தலைவர்களுள் ஒருவரைப் பற்றி 5 மணித்துளி பேசுக.
Answer:
என்னைக் கவர்ந்த தலைவர் “ஜெய்ஹிந்த்” செண்பகராமன்.
இந்திய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துப்பாக்கி ஏந்தியபோது, “ஜெய்ஹிந்த்” என்று கோஷம் எழுப்பினார். இம்மந்திர கோஷத்தை உருவாக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான செண்பகராமன். நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த புத்தன் சந்தை என்ற ஊரில் 1891 செப்டம்பர் 15ந்தேதி செண்பகராமன் பிறந்தார். பெற்றோர் சின்னசாமி பிள்ளை , நாகம்மாள் ஆவர்.

மாணவப் பருவத்திலேயே தேசபக்தி மிகுந்தவராகத் திகழ்ந்தார். செண்பகராமனின் அறிவும் சுதந்திர வேட்கையும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வால்டர் வில்லியம் ஸ்டிரிக்லாண்ட் என்பவரைக் கவர்ந்தன. அதனால் செண்பகராமனை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார். செண்பகராமன் அங்கு பொறியியல் கல்வியில் டாக்டர் பட்டம் பெற்றார். அங்கிருந்து கொண்டே “சர்வதேச இந்திய ஆதரவுக் குழு” என்ற அமைப்பை உருவாக்கினார்.

முதல் உலகப்போரின்போது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கடற்படையை அழிப்பதற்காக ஜெர்மனி ஒரு நீர் மூழ்கிக் கப்பலை உருவாக்கியது. அந்தக் கப்பலின் பெயர் ‘எம்டன்’. இக்கப்பலின் என்ஜினியராகவும், இரண்டாவது கமாண்டராகவும் செண்பகராமன் நியமிக்கப்பட்டார். இக்கப்பல் சென்னை கடற்கரையில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் மக்களை மிரளச் செய்தது. முதல் உலகப்போர் முடிந்தது. ஆனால் சுதந்திரம் கிடைக்கவில்லை.

செண்பகராமன் பல அயல்நாடுகளுக்குச் சென்று வந்தார். ஜவஹர்லால் நேரு ஜெர்மனிக்குச் சென்றபோது செண்பகராமன் வீட்டில் தங்கியுள்ளார். நேதாஜியுடன் நிகழ்ந்த சந்திப்பிற்குப் பிறகு இந்திய தேசிய ராணுவம்’ நேதாஜியில் உருவாக்கப்பட்டது.

முதல் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பொறுப்பேற்றார். அவருக்கும் செண்பகராமனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஹிட்லரின் ஆதரவாளர்களான ‘நாஜிக்கள்’ அவருடைய உணவில் மெல்ல மெல்ல விஷத்தைக் கலந்து விட்டனர். இதனால் அவர் உடல்நிலை நலிவுற்றது.

அவருடைய இறுதி விருப்பம் “இந்தியா விடுதலை பெறுவதற்கு முன் தான் இறந்துவிட்டதால் அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து, தேசியக் கொடி பறக்கும் கப்பலில் நமது நாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பாதி அஸ்தியைக் கரமனை ஆற்றிலும் குமரிமுனை கடலிலும் மீதியை நாஞ்சில் நாட்டின் வளம் மிக்க வயல்களில் தூவ வேண்டும்” என்று கூறினார்.

அதன்படி இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது 1966 செப்டம்பரில் இந்தியாவின் கொடிக் கப்பலில் செண்பகராமனின் அஸ்தி கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆசை நிறைவேற்றப்பட்டது.

Question 3.
வல்வில் ஓரியின் கொடைச் சிறப்பைப் பற்றி பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
நான் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரியின் கொடைச் சிறப்பைப் பற்றிப் பேசவந்துள்ளேன்.

சங்க இலக்கியங்கள் கடையெழு வள்ளல்கள் பற்றிப் பாடியுள்ளன. பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி இவர்கள் எழுவரும் தங்களுடைய கொடைத்திறத்தால் பெயர் பெற்றவர்கள். அவர்களுள் ஒருவர் ஓரி.

இவர் கொல்லிமலையை ஆண்டு வந்தவர். விற்போரில் சிறந்தவர் என்பதால் வல்வில் ஓரி என்று அழைக்கப்பட்டார். இவன் புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி எனப் புகழப்படுபவர். தன்னை நாடி வரும் புலவர்களுக்கும் பிறருக்கும் பொன்னையும், தேர், யானை போன்றவற்றையும் வழங்கிய வள்ளல்.

ஒருநாள் ஓரி வேட்டையாட கானகத்துக்குச் சென்றான். அப்போது பெரும்புலவர் வன்பரணர் தனது பாணர் கூட்டத்துடன் அங்கு வந்து தங்கியிருந்தார்.

அப்போது ஒரு புலி சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த யானையைத் தாக்க தயாராக இருந்தது. இதைக் கண்ட ஓரி, யானையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தான். அந்த அம்பு யானையை வீழ்த்தி விட்டுப் புலியைக் கொன்று, காட்டுப் பன்றியைத் துளைத்துவிட்டு, ஒரு புற்றுக்குள் பாய்ந்தது. புற்றுக்குள் இருந்த முள்ளம் பன்றியும் அம்புக்கு இரையாயிற்று. இந்தக் காட்சியைக் கண்ட வன்பரணரும் உடன் இருந்தவர்களும் வியப்படைந்தனர். ஓரியின் இத்திறமையைப் பாடலாக்கினார் பரணர். உடனிருந்தவர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.

அவர்களுக்குத் தான் வேட்டையாடிய விலங்கின் ஊனைத் தந்து நிறைய தேனையும் வழங்கினான் ஓரி. இசைவாணர்களுக்கு யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். வெள்ளி நாரிலே நீலமணியால் செய்த குவளை மலர்களைத் தொடுத்து அவர்களுக்கு வழங்கினான் என்று சங்கப்பாடல் கூறுகிறது.

இசைப்புலவர்கள் அவனை நாடி வந்தால், ‘நீங்கள் பாடுங்கள்’ என்று சொல்லமாட்டான். அவர்களுக்கு அறுசுவை உணவளித்து உறங்குவதற்கு மெத்தென்று படுக்கையைக் கொடுப்பான். பாணர்கள் பாடுவதும் இல்லை ஆடுவதும் இல்லை. அரச குமாரர்களைப் போல் கவலையின்றி இன்பம் துய்ப்பார்கள். இசைவாணர்கள் தானாகப் பாடும் போதுதான் உண்மையான இசை வெளிவரும் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது.

இவ்வாறு சிறந்த கொடையாளியாகத் திகழ்ந்தான் ஓரி.

எழுதுதல்

Question 1.
சொல்லக்கேட்டு எழுதுக.
Answer:

  1. கண்ணுக்கு அழகு பிறருக்கு இரக்கம் காட்டல்.
  2. கொல்லிமலையை வல்வில் ஓரி என்ற மன்னர் ஆட்சி செய்தார்.
  3. பாலன் அவ்வூர் மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தார்.

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. பொருளுதவி – ………………………………………………………………….
2. திறமைசாலி – ………………………………………………………………….
3. நம்பிக்கை – ………………………………………………………………….
4. ஆராய்ச்சி – ………………………………………………………………….
5. வான்புகழ் – ………………………………………………………………….
Answer:
1. பொருளுதவி – செல்வந்தர்கள் வறியவர்களுக்குப் பொருளுதவி செய்து உதவ வேண்டும்.

2. திறமைசாலி – தெனாலிராமன் திறமைசாலியாக இருந்ததனால் கிருஷ்ணதேவராயரின் அவையில் விகடகவியாக இருந்தார்.

3. நம்பிக்கை – நாம் எச்செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிக்க வேண்டும்.

4. ஆராய்ச்சி – எதனையும் ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்து கூறுவது அறிவியல்.

5. வான்புகழ் – என் நண்பன், வெள்ளத்தில் அடித்துச் சென்ற சிறுவனைக் காப்பாற்றி ஒரே நாளில் வான்புகழ் பெற்றான்.

3. பொருத்தமான சொற்களைக் கொண்டு, தொடரை முழுமையாக்குக.
(
பாணர், ஊர்த்தலைவர், வல்வில் ஓரி, பூவண்ணன், பாலன்)

1. கொடைத்திறத்தில் சிறந்தவர் …………………………………….
Answer:
வல்வில் ஓரி

2. மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தவர் …………………………………….
Answer:
பாலன்

3. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தவர் …………………………………….
Answer:
பூவண்ணன்

4. இசைப் பாடல்களைப் பாடுபவர் …………………………………….
Answer:
பாணர்

5. மூதாட்டிபோல் வேடமிட்டவர் …………………………………….
Answer:
ஊர்த்தலைவர்

மொழியோடு விளையாடு

1. சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வல்வில் ஓரி வாரித் தரும் வ……….ள………. (ள், ல், ழ்)
2. பாணரே! உம் வ……….மையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
3. களிறும் கொடையாய் நல்கும் வா……….. புக……….வல்வில் ஓரி (ன், ண்/ல், ள்,ழ்)
4. மக்களுக்குப் பாலன் மீது அளவ……….ற நம்பிக்கை ஏற்பட்டது. (ர்/ற்)
5. பூவண்ணன் மூதாட்டிக்கு உ……….வு வாங்கிக் கொடுத்தான். (ண, ன, ந)
Answer:
1. வல்வில் ஓரி வாரித் தரும் வள்ல் (ள், ல், ழ்)
2. பாணரே! உம் வறுமையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
3. களிறும் கொடையாய் நல்கும் வான் புகழ் வல்வில் ஓரி (ன், ண்/ல், ள்,ழ்)
4. மக்களுக்குப் பாலன் மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது. (ர்/ற்)
5. பூவண்ணன் மூதாட்டிக்கு உவு வாங்கிக் கொடுத்தான். (ண, ன, ந)

2. சொல்லிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
கொடுக்கப்பட்ட சொற்களையும், குறிப்புகளையும் கொண்டு புதிய சொல் உருவாக்குக.

1. விடுகதை – மரத்திற்கு ஆதாரம் ……………………..
Answer:
விதை

2. திருநெல்வேலி – பயிர்களைப் பாதுகாக்கும் ……………………..
Answer:
வேலி

3. நகர்புறம் – விரலின் மணிமகுடம் ……………………..
Answer:
நகம்

4. இமயமலை – உண்க லம் ……………………..
Answer:
இலை

5. உருண்டை – நமது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று ……………………..
Answer:
உடை

3. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.

1. மதிவாணன் பலம் மிக்கவன்
Answer:
காற்றடித்ததால் மரத்திலிருந்து பழம் விழுந்தது. (பழம்)

2. இந்த மரம் உயரமாக உள்ளது.
Answer:
வீரபாண்டிய கட்டபொம்மன் மறம் மிகுந்தவன்.
(மறம்)

3. நிலா தன் கையில் வளை அணிந்திருந்தாள்.

Answer:
எலி, கொசுவலையைக் கடித்துவிட்டது. (வலை )

4. சூரியனில் இருந்து ஒளி கிடைக்கிறது.
Answer:
பேக்குவரத்துப் பெருக்கத்தினால் ஒலிமாசு ஏற்படுகிறது. (ஒலி)

5. பரிமளா கடையில் வெல்லம் வாங்கினார்.
Answer:
தொடர்மழையால் ஆற்றில் வெள்ளம் வந்தது. (வெள்ளம்)

4. கீழ்க்காணும் குறுக்கெழுத்துப் புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடிக்க.

இடமிருந்து வலம்

1. அறிவியல் அறிஞர்கள் செய்வது ………
Answer:
ஆராய்ச்சி

2. இரக்கம் என்ற சொல்லை இப்படியும் கூறலாம்………
Answer:
பரிவு

வலமிருந்து இடம்

1. உலகின் மற்றொரு பெயர் ……………
Answer:
தரணி

2. மக்களைக் காப்பவர் …………….
Answer:
வேந்தன்

3. நவதானிய வகைகளுள் ஒன்று ………..
Answer:
கம்பு

மேலிருந்து கீழ்

1. அரசரின் ஆலோசகர் ……….
Answer:
அமைச்சர்

2. கொல்லிமலை நாட்டின் அரசன் …..
Answer:
வல்வில் ஓரி

கீழிருந்து மேல்

1. இது வந்திட பத்தும் பறக்கும் ……….
Answer:
பசி

2. விரைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்……………….
விடை:
மெதுவாக

3. இதைக் கேட்டால் மனம் மயங்கும் ……….
Answer:
இசை

5. வரிசைமாறியுள்ள தொடர்களை நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.

1. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
2. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
3. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்.
4. பாலன், பூவண்ண ன் இருவரும் நிருவாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
5. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
Answer:
1. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
2. பாலன், பூவண்ண ன் இருவரும் நிருவாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
3. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
4. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
5. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்.

நிற்க அதற்குத் தக

1. நாட்டு உடைமைகளான பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன்.
2. அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்வேன்.

அறிந்து கொள்வோம்

பிறநாட்டு நாணயங்களை அறிவோமா?

குறிப்புச் சட்டகத்தைப் பயன்படுத்திச் சிறு சிறு கட்டுரை எழுதுதல்

கல்வியின் சிறப்பு

குறிப்புச் சட்டகம் :

  • முன்னுரை
  • கல்வியின் தேவை
  • கல்வியின் சிறப்பு
  • கல்வியால் உயர்ந்தவர்கள்
  • கல்வியால் விளையும் பயன்
  • முடிவுரை

முன்னுரை :
இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். அத்தகைய கல்வியைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

கல்வியின் தேவை :
கல்வி ஓர் ஒளிவிளக்கு. விளக்கானது தன்னைச் சுற்றியுள்ள இடத்தை ஒளி வீசச் செய்யும். அதுபோல் ஒருவர் கற்ற கல்வியானது பலருக்கும் பயன்தரும். கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. நல்ல புத்தகங்களைப் படித்து அறிவுக் கண்களைத் திறக்கும் திறவுகோல் கல்வியாகும்.

கல்வியின் சிறப்பு :
கல்வி கற்றவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிறரால் மதிக்கப்படுவான். கற்றவனுக்குத் தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். கல்வியறிவு பெற்றவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர்.

கல்வியால் உயர்ந்தவர்கள் :
அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன், அம்பேத்கர், சுந்தர் பிச்சை, கல்பனா சாவ்லா, டாக்டர் முத்துலட்சுமி, ஆர். வெங்கட்ராமன் போன்றோர் கல்வியால் உயர்ந்தவர்கள் ஆவர்.

கல்வியால் விளையும் பயன் : –
கல்வியால் எல்லா வளங்களும் கிடைக்கும். கல்வியால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களையெல்லாம் விரட்டமுடியும். கல்வியால் நாட்டில் நன்னெறி படரும். மக்கள் மாண்புறுவர். கல்வி போல மனபயத்தைப் போக்கும் மருந்து வேறொன்றுமில்லை. கல்வித் துணை வறுமையில் கை கொடுக்கும். கல்வியின் பயனே மனித வாழ்வின் பெரும் பேறாகும்.

முடிவுரை :
கல்வியினால் மட்டுமே உலக அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். உலகை முழுமையாகப் படிக்கவும் முடியும். கல்வி மனிதனுக்கு ஓர் உன்னதமான தேவையாகும். தாய் போலத் தாலாட்டி தந்தை போல காக்கும்.

Also Read : Chapter-5---Kalviye-teyvam-Chapter-5-Term-3-5th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen