SaraNextGen.Com

Chapter 6.2 - Atmanam kavitaikal - Chapter 6 11th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் - Text Book Back Questions and Answers

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?
Answer:
விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வகை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம், சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

Question 2.
அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது?
Answer:
மலர்க்கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல் சரிவிலோ, சதுர வட்ட கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.

சிறுவினா

Question 1.
உணவும் உறக்கமும் அணில் கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.
Answer:

  • காலை எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வெண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்கவேண்டும்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்குப் பதில் சொல்லவேண்டும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘கேள்வி’ என்னும் தலைப்பில், ‘ஆத்மாநாம் உணர்த்தும் செய்திகளை எழுதுக.
Answer:

  • காலையில் எழுந்ததும் இரை தோத துள்ளி ஓடும் அணில், இரவு எங்கே உறங்குகிறது?
  • மலர்க்கிளையாகிய படுக்கையிலா ? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
  • ஒன்றல்ல, நூற்றுக்கணகம் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான
  • முகங்களுடனும் சிஜியிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும் !
  • இவை உணலையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது, ஆத்மாநாமின் ‘கேள்வி’க் கவிதைச் செய்தியாகும்.

Question 3.
புளியமர நிழலில் கேட்டதாக ஆத்மாநாம் கூறுவன யாவை?
Answer:
சமீபத்தில் ஒரு புளியமரம் என் நண்பனாயிற்று! தற்செயலாக நான் அப்புறம் சென்றபோது, “என்னைத் தெரிகிறதா? நினைவு இருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது, என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்!

அப்போது உன் முகம் உடல் எங்கும் குளிர்காற்றை வீசினேனே! எப்படியும் என் மடிக்கு வா!” என, நிழலிலிருந்து குரல் கேட்டதாக ஆத்மாநாம் கூறுகிறார்.

Question 4.
ஆத்மாநாம் – குறிப்பெழுதுக.
Answer:

  • மதுசூதனன் என்பது, ‘ஆத்மாநாம்’ என்பாரின் இயற்பெயர்.
  • முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்.
  • 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு.
  • ‘ழ’ என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்.
  • கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

இலக்கணக்குறிப்பு

உணவையும், உறக்கத்தையும் – எண்ணும்மை
சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ல் ‘ன்’ எனத் திரிந்தது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. குளிர்ந்த – குளிர் + த் (ந்) + த் + அ
குளிர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

Question 1.
நூற்றுக்கணக்கு – நூறு + கணக்கு
Answer:
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” (நற்று + கணக்கு) “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நூற்றுக்கணக்கு)

Question 2.
நண்பனாயிற்று – நண்பன் + ஆயிற்று
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நண்பனரயினது)

Question 3.
நிழலிலிருந்து – நிழலில் + இருந்து
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலிருந்து)

பலவுள் தெரிக

Question 1.
‘ழ’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மருதமால் வெளியிடப்பட்டது; கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது…………………..
அ) சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்.
ஆ) கவிதைநூல், திருச்சாழல்
இ) நாளிதழ், நன்னகர் வெல்டர்
ஈ) கட்டுரை நூல், குற்றாலக்கோவை
Answer:
அ) சிற்றிதழ், குஜாலக்குறவஞ்சி

Question 2.
‘ஆத்மாநாம்’ இயற்பெயர் யாது?
அ) ரங்கராஜன்
ஆ) மதுசூதனன்
இ) ராசேந்திரன்
ஈ) மீனாட்சி
Answer:
ஆது சூதனன்

Question 3.
ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பு ………………….
அ) ஒன்றே ஒன்று
ஆ) இரண்டு
இ) ஆறு
ஈ) எதுவும் இல்லை
Answer:
அ) ஒன்றே ஒன்று

Question 4.
அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்………………….
அ) வில்வரத்தினம்
ஆ) மீரா
இ) மீனாட்சி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஈ) ஆத்மாநாம்

Question 5.
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு ………………….
அ) கொடி விளக்கு
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) காகிதத்தில் ஒரு கோடு
ஈ) உதயத்திலிருந்து
Answer:
இ) காகிதத்தில் ஒரு கோடு

Also Read : Chapter-6.3---Kurralak-kuravanci-Chapter-6-11th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen