குறுவினாக்கள்
Question 1.
நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?
Answer:
Question 2.
பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் – நிறுத்தக்குறியிடுக.
Answer:
‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும். ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
கூடுதல் வினாக்கள்
Question 3.
ஒரு பறவையின் வாழ்க்கை பற்றித் தம்மால் எதனால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்?
Answer:
ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்துக்குள்ளும் வாழ்க்கையின் களிப்பு. எத்துணை அதிகமாக இருக்கும் என்பது பற்றித் தம்மால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் குறிப்பிடுகிறார்.
Question 4.
அலட்சிய மனப்பான்மை (தோல்விகளுக்கான மூலகாரணம்) குறித்துத் தாகூர் கூறியுள்ளதென்ன?
Answer:
Question 5.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை ஏன் தாகூர் நிறுவினார்?
Answer:
Question 6.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியர் யார்?
Answer:
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தாகூர்.
சிறுவினா
Question 1.
‘தாமஸிகம்’ என்றால் என்ன?
Answer:
நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர்.
ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், நம் மனம் திகைப்படைந்து நின்றுவிடுகின்ற நிலை. அதாவது, பூஜைக்குத் தேவையான மலர்களைத் தவிர, வேறு எந்தப் பூக்களுடனும் நமக்கு அவசியம் எதுவும் இல்லை என்பதாம்.
கூடுதல் வினாக்கள்
Question 2.
கடித இலக்கியம் குறித்து எழுதுக.
Answer:
‘கடிதம்’ என்பது. குறிப்பிட்ட செய்தியை உரியவருக்குத் தெரிவிக்க எழுதி அனுப்புவதாகும்.
உரிய வடிவுடன் அமைந்த கடிதம். பொருள் செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும் இலக்கிய வடிவம் பெறுகிறது.
கடித இலக்கியத்தின் காலத் தொன்மையைக் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணப்பெறும் கடிதங்கள் விளக்கும். தாகூரின் கடிதங்கள். கற்பனை, நகைச்சுவை, ஆழ்ந்த சிந்தனை முதலானவற்றை உள்ளடக்கிய கவித்துவ இயல்பு கொண்டவை.
Question 4.
ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாறாகத் தாகூர் கூறியது என்ன?
Answer:
எங்கோ ஓர் ஊரின் எல்லையில் அமைந்த தோப்பின் மரக்கிளையில் பறவையின் கூடு இருந்திருக்கும். இருளுக்குப்பின் கூடு திரும்பித் தன் துணையுடன், விரித்த சிறகுகளின் வெம்மை தணிய, உடல் சோர்ந்து உறங்கி இருக்கலாம்.
இரவில் மாமரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழ, கூட்டைவிட்டுப் பறவை சிதறி விழுந்திருக்கும்.
அதன்பின், ஒரு கணம் கண்விழித்த பறவை, மீண்டும் விழிக்க அவசியம் இல்லாமல் போய்விட்டது என, ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாற்றைத் தாகூர் கூறியுள்ளார்.
Question 5.
நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்களை மனிதன் எவ்வாறு ஏற்கிறான்?
Answer:
Question 8.
தாகூர் எதனை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார்?
Answer:
Question 9.
தாகூர், குறித்து நீ அறிவன யாவை?
Answer:
தாகூர், தம் 16ஆம் வயதில் கவிதைகள் எழுதினார். இகைப்பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், குறு நாடகங்கள், பெருநாவல்கள், சிறுகதைகள் எனப் பல எழுதி, இலக்கியப் பணியாற்றினார்.
பயணக் கட்டுரைகள் எழுதினார். ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் பல எழுதினார். ஓவியங்கள் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினார்.
‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும், கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் போற்றப்பட்டார்.
‘ஜாலியன் வாலாபாக் (1919) படு கொலையால் மனம் வருந்தி, ஆங்கில அரசைக் கண்டித்துத் தமக்கு அளித்த ‘சர்’ பட்டதில் தத் துறந்தார். 1921இல் ‘விஸ்வபாரதி’ பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
‘குருதேவ்’ என அனை மகலும் அழைக்கப்பட்டார். இவரது ‘ஜனகணமன’ பாடல், இந்தியாவிலும், ‘அமர் சோனார் பங்களா பாடல், வங்க தேசத்திலும், நாட்டுப் பண்களாகப் போற்றப்படுகின்றன.
Question 10.
த. நா. குமாரசுவாமி பற்றி அறிவன யாவை?
Answer:
த. நா. குமாரசுவால், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் சேர்ந்தவர்! ‘தாகூரின் கடிதங்கள்’ என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்.
அதனைச் சாதித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. தமிழ் – வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொன்மைப் பாராட்டி, வங்க அரசு, ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.
நெடுவினா
Question 1.
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.
Answer:
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகள் :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகின்றன. ஆற்று வெள்ளத்தில் இறந்து மிதந்துவந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், தாகூர் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்துத் தம் சிதறிய கடிதத்தில் கூறுகிறார்.
பறவை மரணம் :
எதிர்க்கரை புலப்படாதவகையில் தளும்பிய நீரோடு பெருக்கெடுத்த ‘பத்மா’ ஆறு ஒருபுறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறுபறவை கீழே விழுந்து, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் குறிப்பிடுகிறார். சிறு பறவையின் அழகு , கூட்டின் அழகு , உழைப்பின் சிறப்பு, ஓய்வு எடுக்கும் நிலை ஆகியவற்றை அந்தப் பறவையின் வரலாறாகச் சுட்டி, அதன் மரணத்தில் முடிக்கிறார்.
தம் சிந்தனைக்கான காரணம் :
மனிதன் தன் சுகத்திற்குமுன், பிற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மற்றப் பிராணிகளை அற்பமாக நினைப்பதையும் காட்டுகிறார். பிற உயிர்களிடம் கருணை காட்டுவதை, நடக்க முடியாத அதிசயமாக நம் சரித்திரம் விட்டுவிடவில்லை . அதனால், ஒரு பறவையின் சின்னஞ்சிறு வாழ்க்கைக் களிப்பு, எத்துணை அளவு இருக்கும் என்பதைத் தம்மால் சிந்திக்க முடிவதாகத் தாகூர் கூறுகிறார்.
அலட்சிய மனப்பான்மை : மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. இலக்கியங்களில் கூறப்பட்ட பல மலர்களின் பெயர்களை மட்டுமே அறிவோம். அவை, எவை எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். ஆனால், அப்பெயருக்குரிய மலர் எது என அறியோம். பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர், ஆறுகளை மட்டும் நினைவில் கொள்கின்றனர்.
தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போகப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் திகைத்து நின்று வருகிறது. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’; உலகில் எத்தனையோ நேர்த்தியா – புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.
இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் என்னும் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.
கூடுதல் வினா
Question 2.
நம் தோல்விகளுக்கு எல்லாம் மூலக்காரணமாகத் தாகூர் சுட்டுவன யாவை?
Answer:
சிதறிய கடிதங்கள் உணர்த்துவன :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவன. பத்மா ஆற்றின் கரை தெரியா வெள்ளத்தால் மரம் சாய, பறவை ஒன்று உயிரிழந்து தந்து வந்தது. நாட்டுப்புறங்களில் மாபெரும் இயற்கை, எல்லாவற்றையும் விழுங்கும் இயல்புடையதாக விளங்குகிறது. பட்டணங்களில் இயற்கையின் வளங்களான பிற உயிரினங்கள் மதிக்கப்படுவதில்லை பாரத நாட்டின் பண்பு, எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதாகும்.
அலட்சிய மனப்பான்மை :
மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. சால மலர்கள், தம் மணத்தால் மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இலக்கியங்களில் கூறப்பட்ட ல மலர்களின் பெயர்களை அறிவோம். அவை எவை எனத் தெரிந்துகொள்ள, முயற்சி செய்வதில்லை . அவ்வளவு அலட்சியம்.
தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போடிப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், திகைத்து நின்று விடுகிறது. இதனைத் ‘தாமலிகம் என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’. உலகில் எத்தனையோ நேர்த்தியான புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.
வாழ்வில் உயர வழி :
மக்களிடம் கொண்ட பற்றுதல் காரணமாக உண்டானதில்லை தேசப்பற்று. அது தேர்வுக்குப் படிக்கும் பாடநூல்களால் உருவானது. நாம் அறிந்த உலகம் குறுகலானது. அதில் அதிகமான பொருள்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை. இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் எனக் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.
பலவுள் தெரிக
Question 1.
பூஜை, விஷயம், உபயோகம் – என்பவை முறையே ……………. என்று தமிழில் வழங்கப்படும்.
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு
ஆ) பயன்பாடு, வழிபாடு, செய்தி
இ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
ஈ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
Answer:
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு
கூடுதல் வினாக்கள்
Question 2.
செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது ………………..
அ) செய்தித்தாள்
ஆ) குறுஞ்செய்தி
இ) தொலைபேசி
ஈ) கடிதம்
Answer:
ஈ) கடிதம்
Question 3.
தாகூரின் கடிதங்கள், …………….. என்பர்.
அ) கற்பனையானவை
ஆ) நகைச்சுவையானவை
இ) அறிவுரை வழங்குபவை
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை
Answer:
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை
Question 4.
“பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” /“கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி” – என்று குறிப்பிடப்படுபவர் …………….
அ) த. நா. குமாரசுவாமி
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) இரவீந்திரநாத தாகூர்
ஈ) பூபேந்திரநாத தாகூர்
Answer:
இ) இரவீந்திரநாத தாகூர்
Question 5.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலி என்பது ………………
அ) நாடக நூல்
ஆ) சிறுகதை நூல்
இ) நாவல்
ஈ) கவிதை நூல்
Answer:
ஈ) கவிதை நூல்
Question 6.
தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் …………………..
அ) கல்கத்தா பல்கலைக்கழகம்
ஆ) சாந்திநிகேதன் பல்கலைக்கழகம்
இ) வங்க பல்கலைக்கழகம் ,
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
Answer:
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
Question 7.
தாகூரின் கடிதங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது …………….
அ) தமிழ்நாடு அரசு
ஆ) மேற்கு வங்க அரசு
இ) மியூசிக் அகாதெமி
ஈ) சாகித்திய அகாதெமி
Answer:
ஈ) சாகித்திய அகாதெமி
Question 8.
த. நா. குமாரகாரமிக்கு வங்க அரசு செய்த சிறப்பு …………………….
அ) தாகூர் இலக்கிய விருது
ஆ) நேதாஜி இலக்கிய விருது
இ) நேரு இலக்கிய விருது
ஈ) ஜோதிபாசு இலக்கிய விருது
Answer:
ஆ) நேதாஜி இலக்கிய விருது
Question 9.
‘பத்மா’ என்பது, ………………
அ) இறந்துபோன பறவையின் பெயர்
ஆ) ஒருவகை மலரின் பெயர்
இ) பௌ – கதா – கவோ என்னும் புறா இனம்
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
Answer:
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
Question 10.
‘தாமஸிகம்’ என்பது
அ) ஒருவகைப் பறவை
ஆ) ஒரு நதி
இ) ஒருவகை மலர்
ஈ) மெடீரியலிஸம்
Answer:
ஈ) மெடீரியலிஸம்
Question 11.
‘பௌ – கதா – கவோ’ என்பது ……………………
அ) ஒருவகை மலர்
ஆ) ஒரு புறா இனம்
இ) மைனா
ஈ) ஒரு நதி
Answer:
ஆ) ஒரு புறா இனம்
Question 12.
சாந்தி நிகேதனத்திலுள்ள காவியப் புகழ்பெற்ற மரம்……………..
அ) ஸேவுந்தி
ஆ) தாமஸிகம்
இ) பௌ-கதா-கவோ
ஈ) பியால
Answer:
ஈ) பியால
Question 13.
‘விருப்புடையவள்’ என்பதைக் குறிக்கும் சொல்……………..
அ) ஸேவுந்தி
ஆ) கபோதாக்ஷி
இ) மயூராக்ஷி
ஈ) இச்சாமதி
Answer:
ஈ) இச்சாமதி
Question 14.
‘பத்மா’, சற்று ஒருபுறமாகப் புரண்டாள். இதில் ‘பத்மா’ என்பது……………..
அ) மாமரக்கிளை
ஆ) பெரிய நதி
இ) பறவைக்கூடு
ஈ) மண் சரிவு
Answer:
ஆ) பெரிய நதி
Question 15.
‘விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ……………..
அ) மகாத்மா காந்தியடிகள்
ஆ) இரவீந்திரநாத தாகூர்
இ) த. நா. குமாரசாமி
ஈ) ஜவகர்லால் நேரு
Answer:
ஆ) இரவீந்திரநாத தாகூர்
விடைக்கேற்ற வினா அமைக்க.
1. பொருட்செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும், கடிதம், இலக்கியமாக உருப்பெறுகின்றது.
வினா : கடிதம் இலக்கியமாக எப்போது உருப்பெறுகின்றது எவ்வாறு?)
2. இறந்துபோன ஒரு சின்னஞ்சிறு பறவை, ஆற்று வெள்ளத்தில் மிதந்து வருவதை இன்று கண்டேன்.
வினா : ஆற்று வெள்ளத்தில் இன்று கண்டது என்ன? –
3. தன் சுகதுக்கத்திற்குமுன் மற்ற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி மனிதன் எண்ணுவதுகூட இல்லை .
வினா : எப்போது, எதை மனிதன் எண்ணுவது இல்லை?
4. நமது சாத்திரங்கள் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதை நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று விட்டுவிடவில்லை.
வினா : நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று நமது சாத்திரங்கள் எதை விட்டுவிடவில்லை ?
5. மலரிடம் இவ்வளவு அலட்சிய மன பான்மை வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை.
வினா : வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அலட்சிய மனப்பான்மை எது?
6. ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் நம் மனம் திகைப்படைந்து நின்று விடுகிறது.
வினா : நம் மனம் எதற்கு அப்பால் செல்ல இயலாமல் எவ்வாறு நின்று விடுகிறது?
7. இயற்கையிடம் இந்த அலட்சிய மனப்பான்மைதான் நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் மூலகாரணம்.
வினா : நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் எம் மனப்பான்மை மூலகாரணம்?
8. பரிட்சையில் தெற வேண்டின் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது.
வினா : சரித்திரப் பாடத்தை ஏன் புறக்கணிக்க முடியாது?
9. தாய் மொழிக் கல்வி வழியாகப் பிற பாடங்களைப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்.
வினா : பிற பாடங்களை எம் மொழி வழியாகப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்?
10. மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை அப்துல்கலாமைச் சாரும்.
வினா : மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை யாரைச் சாரும்?
11. தகவல் தொழில் நுட்ப உலகில் கணினிப் புரட்சி இன்றியமையாதது.
வினா : கணினிப் புரட்சி எவ்வுலகில் இன்றியமையாதது?
12. சொற்களை இணைத்துப் பேசும் திறனை நாம் குழந்தைப் பருவம் முதலே பெற்று வந்திருக்கிறோம்.
வினா : எத்தகு திறனை நாம் குழந்தைப் பருவம்முதலே பெற்று வந்திருக்கிறோம்?