SaraNextGen.Com

Chapter 10 - Putuvai valartta tamil - Chapter 10 Term 3 5th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘குயில்பாட்டு’ நூலை எழுதியவர் யார் …………………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) புதுவை சிவம்
Answer:
அ) பாரதியார்

Question 2.
‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனப் பாடியவர் …………
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) பிரபஞ்சன்
Answer:
அ) பாரதிதாசன்

Question 3.
“பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆட்டா ” எனப் பாடியவர் …………
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) திருமுருகன்
Answer:
ஆ) வாணிதாசன்

Question 4.
பாட்டிசைத்து – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பாட்டு + இசைத்து
ஆ) பாடல் + இசைத்து
இ) பா + இசைத்து
ஈ) பாட + இசைத்து
Answer:
அ) பாட்டு + இசைத்து

Question 5.
மூன்று + தமிழ் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………….
அ) மூன்றுதமிழ்
ஆ) முத்துத்தமிழ்
இ) முதுதமிழ்
ஈ) முத்தமிழ்
Answer:
ஈ) முத்தமிழ்

ஆ. பொருத்துக

1. பாரதிதாசன் – கொடி முல்லை
2. தமிழ் ஒளி – பாஞ்சாலி சபதம்
3. பாரதியார் – பாவலர் பண்ணை
4. வாணிதாசன் – மாதவி காவியம்
5. திருமுருகன் – இருண்ட வீடு
Answer:
1. பாரதிதாசன் – இருண்ட வீடு
2. தமிழ் ஒளி – மாதவி காவியம்
3. பாரதியார் – பாஞ்சாலி சபதம்
4. வாணிதாசன் – கொடி முல்லை
5. திருமுருகன் – பாவலர் பண்ணை

. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?
Answer:

  • பாஞ்சாலி சபதம்
  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு.

Question 2.
பாரதிதாசன் – பெயர்க் காரணம் தருக.
Answer:
பாரதிதாசன், பாரதியார் மீது அன்பும், பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான் கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.

Question 3.
பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?
Answer:
பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘வானம் வசப்படும்’ என்ற நூல் ஆகும்.

Question 4.
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?
Answer:
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் ;

  • வாணிதாசன்
  • புதுவை சிவம்.

Question 5.
தமிழ்ஒளியின் படைப்புகளை எழுதுக.
Answer:
வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை, கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியன தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.

. சிந்தனை வினா.

தமிழின் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் எவ்வாறெல்லாம் தொண்டாற்றியுள்ளனர்?
Answer:
தமிழ் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் தொண்டாற்றிய விதம் ;
தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் மிகுந்த பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமது சுதேசமித்திரன் நாளிதழில் எழுதினார். இதன் மூலம் தமிழை மீட்சி பெறச் செய்தார்.

பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடினார். தமிழைத் தன் உயிர் என்று பாடினார். இசையமுது, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு போன்ற பல நூல்களை எழுதி தமிழை வளர்த்தார்.

தமிழில் பெரும்புலமை பெற்ற செய்குத்தம்பி பாவலர் பல அரிய தமிழ் நூல்களை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.

அழ. வள்ளியப்பாகுழந்தைக் கவிஞர் என்ற பாராட்டுகுரியவர். சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தபோது தம் தமிழ்ப் பணியைத் தொடங்கினார். பிறகு வங்கிப் பணிக்குச் சென்றார். வங்கிப் பணியில் இருந்தாலும் அவருடைய தமிழ்ப்பணியை விடாமல் பலநூல்களை இயற்றித் தமிழுக்குத் தொண்டாற்றினார்.

இவ்வாறு எத்தனையோ கவிஞர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். பிறநாட்டு அறிஞர்களும் தமிழை வளர்த்துள்ளனர்.

கற்பவை கற்றபின்

Question 1.
நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்திச் சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய புதுவை படைப்பாளிகளைப் பற்றிய செய்திகளை திரட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. பாரதிதாசனின் இயற்பெயர் ……………
Answer:
னகசுப்புரத்தினம்

2. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் ……………………
Answer:
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

3. பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர்……..
Answer:
தந்தை பெரியார்

4. பாரதியார் எழுதிய முப்பெருங்காவியங்கள் …………..
Answer:
பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு

5. கல்வியின் உயர்வைச் சொல்லும் பாரதிதாசனின் நூல் ……………
Answer:
குடும்ப விளக்கு

6. கல்லாமையின் இழிவைக் கூறும் பாரதிதாசனின் நூல் ………..
Answer:
இருண்ட வீடு)

7. பாரதிதாசனின் நூல்களுள் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற நாடக நூல்
Answer:
பிசிராந்தையார் நாடக நூல்)

8. வாணிதாசன் அறிந்த மொழிகள் ………..
Answer:
தமிழ், பிரெஞ்சு , ஆங்கிலம்)

9. வாணிதாசனின் புனைப்பெயர் ……………
Answer:
ரமி

10. வாணிதாசனின் இயற்பெயர் .. ………….. என்கின்ற அரங்கசாமி.
Answer:
எத்திராசலு

11. வாணிதாசன் இலக்கண இலக்கியங்களைப் …………. கற்றுத் தேர்ந்தார்.
Answer:
பாரதிதாசனிடம்)

12. பாவேந்தரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ……………..
Answer:
வாணிதாசன், புதுவை சிவம்)

13. தமிழ் ஒளிக்கு பெற்றோர் வைத்த பெயர் …………….
Answer:
விஜயரங்கம்

14. தமிழ் ஒளி எழுதிய மேடை நாடகம் ……..
Answer:
சிற்பியின் கனவு

15. சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய இசை நாடகமாகக் கூறப்படுவது தமிழ் ஒளியின் …….. என்ற காவியம்.
Answer:
விதியோ, வீணையோ

16. பிரபஞ்சனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ……….
Answer:
வானம் வசப்படும்

குறுவினா :

Question 1.
தமிழ் ஒளி பாரதியாரைப் பற்றி என்ன பாடியுள்ளார்?
Answer:
“சீறி அடித்துச் சுழன்ற அலைகளில் சிக்கிய ஒரு படகாய்த் தடுமாறி இளைத்து மடிந்த மகாகவி தன் சரிதம் உரைப்பேன்” என்று பாரதியாரைப் பற்றிப் பாடியுள்ளார் கவிஞர் தமிழ் ஒளி.

Question 2.
புதுவையில் பிறந்த தமிழ்ச் சான்றோர் யாவர்?
Answer:
வாணிதாசன், புதுவை சிவம், தமிழ் ஒளி, பிரபஞ்சன், திருமுருகன்.

சிறுவினா :

Question 1.
பாரதிதாசன் பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
  • இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர். பாரதியார் முன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்ற பாடலைப் பாடிக் காட்டினார்.
  • பாரதியார் மீது அன்பும் பாசமும் பற்றும் உடையவர். அதனால்தான், தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.
  • தமிழின் சிறப்பை, பொதுவுடைமையை, பெண்ணின் பெருமையைப் பாடியவர். இயற்கை, பெண் விடுதலை போன்ற பல கருத்துகளை முன் வைத்து நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
  • குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, தமிழியக்கம், குறிஞ்சித்திட்டு, புரட்சிக்கவி, இசையமுது என 72 நூல்களுக்கும் மேல் எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
  • இவருடைய பிசிராந்தையார் நாடக நூல் ‘சாகித்திய அகாதெமி’ விருதினைப் பெற்றுள்ளது.
  • தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த தமிழறிஞர்களுக்கு இவரது பெயரால் விருது வழங்கிச் சிறப்பு செய்கிறது.

Question 2.
வாணிதாசன், புதுவை சிவம் பற்றி எழுதுக.
Answer:

  • வாணிதாசன் புதுவைக் கவிஞர்களுள் ஒருவர். இயற்பெயர் எத்திராசலு என்கிற அரங்கசாமி.
  • இவர் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்தவர். ‘ரமி’ என்று புனைபெயரில் எழுதியவர்.
  • பாரதிதாசன் நடத்திய தமிழ் வகுப்பில் அவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் கவிஞர் வாணிதாசனும், புதுவை சிவமும் ஆவர்.
  • பாரதியார் பிறந்த நாளன்று, “பாரதிநாள் இன்றடா பாட்டிசைத்து ஆட்டா” என்று வாணிதாசன் பாடிய பாடல், அவருக்கு முதற்பரிசைப் பெற்றுத் தந்தது.
  • யாப்பு இலக்கணம் பயின்றதோடு புலவர் தேர்வு எழுதியும் இருவரும் தேர்ச்சி பெற்றனர்.
  • பாவேந்தரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்ட இருவருமே பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். வாணிதாசனின் ‘கொடிமுல்லை’ என்னும் நூல் சிறப்பு பெற்றது.
  • புதுச்சேரி அரசு இவர்கள் இருவரின் நூற்றாண்டு விழாக்களையும் மிகச் சிறப்பாக நடத்தியது. மேலும் ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாக்களையும் நடத்தி வருகிறது.
  • தமிழக அரசு, பாவேந்தர் விருதினை இவர்கள் இருவருக்கும் வழங்கிச் சிறப்பித்தது.

Question 3.
தமிழ் ஒளி பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
(i) தமிழ் ஒளிக்குப் பெற்றோர் வைத்த பெயர், விஜயரங்கம். இவரும் பாரதிதாசனின் மாணவர்தாம். தமிழ்ஒளி என்னும் பெயரில் இவர், தம்மைக் கவிஞராக அறிமுகப்படுத்திக் கொண்டவர்.

(ii) இவரது முற்போக்கான கருத்துகள், பாடலில் எதிரொலித்தன. கல்லூரிக் காலத்தில், ‘சிற்பியின் கனவு’ என்னும் மேடை நாடகத்தைப் படைத்துள்ளார். இந்த நாடகம்தான் பின்னாளில் ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

(iii) வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை என்னும் குறுங்காவியங்களைப் படைத்துள்ளார். இந்நூல்களைப் பற்றிய திறனாய்வு, சென்னை வானொலியிலும் திருச்சி வானொலியிலும் ஒளிபரப்பப்பட்டது.

(iv) இவை மட்டுமின்றிக் கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியவற்றையும் படைத்துள்ளார். இவரது ‘விதியோ வீணையோ’ என்னும் காவியம், சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய இசை நாடகமாகக் கூறப்படுகிறது.

(v) ‘முன்னும் பின்னும்’, ‘அணுவின் ஆற்றல்’ ஆகிய இரண்டு பாடல்கள் பாடநூல்களில் இடம் பெற்றுள்ளது. இவரது ‘மாதவி காவியம்’ என்னும் நூல் கல்லூரிப் பாடநூலாக வைக்கப்பட்டது.

Question 4.
திருமுருகன் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
தமிழில் பிழையின்றி எழுதுவது குறித்த நூல்களைப் படைத்தவர் இலக்கணச் சுடர் இரா.திருமுருகன். இவர் தனித்தமிழ்ப் பற்றால் சுப்பிரமணியன் என்ற தம் பெயரைத் ‘திருமுருகன்’ என்று மாற்றி அமைத்துக் கொண்டவர்.

நூறு சொல்வதெழுதல், 17 தமிழ்ப் பாடநூல்கள், ஆய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், பாவலர் பண்ணை , என் தமிழ் இயக்கம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.லெனின் தங்கப்பாவும் இணைந்து நடத்திய ‘தெளிதமிழ்’ இதழ் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

Question 5.
எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
பிரபஞ்சன் தம் எழுத்தால் தாய்நாட்டைப் போற்றச் செய்தவர்; உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர், எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ‘வானம் வசப்படும்’ என்ற நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இவரது உடல், புதுவை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது என்பது தமிழுக்குக் கிடைத்த சிறப்பாகும்.

Also Read : Chapter-11---Nanmaiye-nalam-tarum-Chapter-11-Term-3-5th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen