WELCOME TO SaraNextGen.Com

Chapter 10 - Patam inke! Palamoli enke? - Chapter 10 - படம் இங்ேக! பழெமா எங்ேக? - Term 1 - 5th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 10 - Patam inke! Palamoli enke? - Chapter 10 - படம் இங்ேக! பழெமா எங்ேக? - Term 1 - 5th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
மரப்பொந்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + பொந்து
ஆ) மர + பொந்து
இ) மரப் + பொந்து
ஈ) மரப்பு + பொந்து
Answer:
அ) மரம் + பொந்து

Question 2.
அக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அக் + கரை
ஆ) அந்த + கரை
இ) அ + கரை
ஈ) அ + அரை
Answer:
இ) அ + கரை

Question 3.
சூறை + காற்று இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சூறைகாற்று
ஆ) சூற்காற்று
இ) சூறக்காற்று
ஈ) சூறைக்காற்று
Answer:
ஈ) சூறைக்காற்று

Question 4.
கண் + இமைக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கண்ணிமைக்கும்
ஆ) கண் இமைக்கும்
இ) கண்மைக்கும்
ஈ) கண்ண மைக்கும்
Answer:
அ) கண்ணிமைக்கும்

Question 5.
நானூறு இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நான்கு + நூறு
ஆ) நா + நூறு
இ) நான்கு + னூறு
ஈ) நான் + நூறு
Answer:
அ) நான்கு + நூறு

. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

அ) மணியோசை – …………………… + …………………………..
ஆ) தேனிசை – …………………… + …………………………..
Answer:
அ) மணியோசை – மணி + ஓசை
ஆ) தேனிசை – தேன் + இசை

. பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:
புத்தி, அடி, காலை, பயிர், வளையாதது

1. யானைக்கும் ………………. சறுக்கும்.
Answer:
அடி

2. விளையும் ……………….. முளையிலே தெரியும்.
Answer:
பயிர்

3. ஐந்தில் …………….. ஐம்பதில் வளையாது.
Answer:
வளையாதது

4. ஆத்திரக்காரனுக்குப் ………………. மட்டு.
Answer:
புத்தி

5. ஆழம் தெரியாமல் ….. …………….. விடாதே.
Answer:
காலை

. சொல்லை இடம்மாற்றிப் பழமொழியைக் கண்டுபிடிக்க.

Question 1.
உழுவதை அகல விட உழு ஆழ……………………………..
Answer:
அகல உழுவதை விட ஆழ உழு. வளையாதது

Question 2.
வளையாது ஐம்பதில் ஐந்தில்……………………………..
Answer:
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

Question 3.
மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு அமிழ்தமும்……………………………..
Answer:
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.

Question 4.
குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை……………………………..
Answer:
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

Question 5.
கற்பவர் கரையில் கல்வி நாள்சில……………………………..
Answer:
கல்வி கரையில கற்பவர் நாள்சில.

. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பழமொழி என்பது யாது?
Answer:
நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய வார்த்தைகளே பழமொழிகள் ஆகும்.

Question 2.
கிளி, யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?
Answer:
செல்லம்மாவுக்கு மாம்பழம் தருவதாகக் கிளி கூறியது.

Question 3.
கிளியைப் ‘பழமொழிக் கிளி’ என அழைக்கக் காரணம் என்ன?
Answer:
மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப்பொந்திலிருந்து எடுத்துக்காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால் அதைப் ‘பழமொழிக் கிளி’ என்று அழைக்கின்றனர்.

Question 4.
இப்பாடத்தில் நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடுக.
Answer:

  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • இக்கரைக்கு அக்கரை பச்சை.
  • ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
  • அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.

. சிந்தனை வினா

கிளியைப்போல், நீ பழமொழி கூறுவதாய் இருந்தால் என்ன பழமொழிக்கு எப்படிப் படம் வரைந்து விளக்குவாய்? வகுப்பறையில் செயல்படுத்து.
Answer:
பழமொழி: அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.

கற்பவை கற்றபின்

Question 1.
உன் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி பேசும்போது பயன்படுத்தும் பழமொழிகளைத் தொகுத்து வருக. அவைபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக. .
Answer:

  • சிறுதுளி பெருவெள்ளம்
  • தனிமரம் தோப்பாகாது
  • ஒற்றுமையே உயர்வு
  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
  • இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
  • விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை

ஆகிய பழமொழிகள் என் தாத்தா, பாட்டி பேசும் போது பயன்படுத்தும் பழமொழிகள் ஆகும்.

Question 2.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பழமொழிகளையும், அவற்றின் பொருள்களையும் உம் சொந்த நடையில் கூறுக.

(i) யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
Answer:
முன்னெச்சரிக்கை அறிந்து செயல்படுதல்.

(ii) இக்கரைக்கு அக்கரை பச்சை.
Answer:
இதற்கு
அதுவே பரவாயில்லை.

(iii) ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
Answer:
ஆடி மாதக் காற்றில் அம்மி கூடப் பறந்துவிடும்.

(iv) ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
Answer:
திருக்குறளும், நாலடியாரும் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

(v) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
Answer:
வாய்ப்புகளைக் கிடைக்கும்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

(vi) அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.
Answer:
எந்தச் செயலையும் ஆழ்ந்து செய்ய வேண்டும்.

Question 3.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் உம் சொந்த நடையில் கூறுக.
Answer:

Question 4.
பள்ளி நூலகத்தில் உள்ள ‘பழமொழிக்கதைகள்’ புத்தகத்தைப் படித்து பழமொழிக்கான விளக்கத்தை வகுப்பறையில் கதையுடன் பகிர்ந்து கொள்க.
Answer:
பள்ளி குளத்தின் அருகே வசித்து வந்த எலியும் தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் அந்தக் குளத்தில் கோடை காலம் என்பதால் நீர் வறண்டுவிட்டது. எலி அலைந்து, திரிந்து எப்படியே ஒரு நீருள்ள பெரிய குளத்தைக் கண்டுபிடித்தது. தனது நண்பன் தவளையே அழைத்துக் கொண்டு சென்றது.

வழியில் காணாமல் போய்விடுவோம். அதனால் எலியும் தவளையும் கயிற்றால் இருவரின் காலையும் இணைத்துக் கட்டிக் கொண்டன. நீண்ட பயணத்திற்குப் பிறகு குளம் வந்தது. குளத்தைக் கண்டவுடன் தன்னுடன் கயிற்றில் கட்டியுள்ள எலியை நினைக்காமல், நன்றி மறந்து குளத்துக்குள் குதித்து விளையாடியது.

கயிற்றால் கட்டப்பட்டிருந்த எலி பரிதாபமாக செத்தது. பருந்து ஒன்று எலியைத் தின்பதற்காகத் தூக்கிய போது எலியுடன் கட்டப்பட்ட தவளையும் மாட்டிக் கொண்டு, மாண்டு போனது.

கதை உணர்த்தும் பழமொழிகள்:

  • முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும்.
  • கூடா நட்பு கேடாய் முடியும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
பழமை + மொழி இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) பழமைமொழி
ஆ) பழையமொழி
இ) பழமையானமொழி
ஈ) பழமொழி
Answer:
ஈ) பழமொழி

Question 2.
மாங்காய்கள் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) மா + காய்கள்
ஆ) மாங் + காய்கள்
இ) மா + ங்காய்கள்
ஈ) மாங்கு + காய்கள்
Answer:
அ) மா + காய்கள்

Question 3.
சொல்லுக்குறுதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) சொல்லுக்கு + குருதி
ஆ) சொல் + உறுதி
இ) சொல்லு + உறுதி
ஈ) சொல்லுக்கு + உறுதி
Answer:
ஈ) சொல்லுக்கு + உறுதி

Question 4.
இக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) இ + கரை
ஆ) இந்த + கரை
இ) இக் + கரை
ஈ) இ + அரை
Answer:
அ) இ + கரை

விடையளி :

Question 1.
பழமொழி பற்றிய நீதி நூல் எது?
Answer:
பழமொழி பற்றிய நீதி நூல்: பழமொழி நானூறு.

Question 2.
தோப்பில் உள்ள மரத்தில் எவை காய்த்துத் தொங்கின?
Answer:
தோப்பில் உள்ள மரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்கின.

Question 3.
சிறுவர்கள் எதற்காகத் தோப்பிற்கு வருவார்கள்?
Answer:
சிறுவர்கள் மாங்காய் பறிப்பதற்காகத் தோப்பிற்கு வருவார்கள்

Question 4.
கிளி எங்கு இருந்தது? அதன் பெயர் யாது?
Answer:
கிளி பழையனூர் மாந்தோப்பில் இருந்தது.
அதன் பெயர்: செல்லம்மா